Tuesday, November 26, 2019

இந்திய சாட்சியச் சட்டம் மூலம் ஆவண நகல்களைப் பெற..

இந்திய சாட்சியச் சட்டம் மூலம் ஆவண நகல்களைப் பெற..
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தான் ஆவண நகல்களைப் பெற முடியும் என்பது இல்லை. அந்தச் சட்டம் வருவதற்கு முன்பே இந்திய சாட்சியச் சட்டம் (INDIAN EVIDENCE ACT) நமக்கு அந்த உரிமையை வழங்கியுள்ளது. இதன் மூலம் ஆவண நகல்களை நாம் எப்படிப் பெறலாம் என்பதைப் பற்றி கீழே காணலாம்.
இந்திய சாட்சியச் சட்டம் - 1872
இந்திய சாட்சியச்சட்டம், பிரிவு 74ல் பொது ஆவணங்களை பற்றி தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது. 
இந்திய சாட்சியச்சட்டம், பிரிவு 75ல்  தனியார் ஆவணங்களை பற்றி தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது. 
இந்திய சாட்சியச்சட்டம், பிரிவு 76 ஒரு பொது ஊழியரின் வசம் உள்ள பொது ஆவணங்களை ஆய்வு செய்யவும், அவற்றை சான்று ஒப்பம் இட்ட ஆவண நகலாக பெறவும் நமக்கு உரிமையை வழங்கியுள்ளது.  அதற்கென்று சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ள கட்டணத்தை நாம் அவர்களிடம் செலுத்த வேண்டும். சான்றொப்பம் இட்டு ஆவண நகல்களை அளிக்க முடியாவிட்டால், அந்த ஆவண நகல்களின் கீழே உண்மை நகல் என்று கையொப்பம் இட்டு பொது ஊழியர் அதனை நமக்கு வழங்க வேண்டும்.
ஆவண நகல்களைப் பெற என்ன செய்ய வேண்டும்? 
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு நீங்கள் எழுதுகின்ற விண்ணப்பத்தின் வலதுபுறத்தில் ஐந்து ரூபாய் கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் ஒட்டவேண்டும். தலைப்பில் இந்திய சாட்சியச்சட்டம், பிரிவு 76ன் கீழ் ஆவண நகல்கள் வேண்டி விண்ணப்பம் என்று குறிப்பிட வேண்டும்.   அந்தக் கடிதத்தில் உங்களுக்குத் தேவையான ஆவண நகல்களைப் பற்றி குறிப்பிட வேண்டும்.  கடிதத்தை பதிவுத்தபாலில் ஒப்புதல் அட்டை இணைத்து அனுப்ப வேண்டும். 
கடிதம் அனுப்பி 30 நாட்கள் ஆனபிறகும் எந்தவித பதிலும் அவர்கள் உங்களுக்கு தரவில்லை என்றால், ஒரு நினைவூட்டல் கடிதம் ஒன்றை அவர்களுக்கு அனுப்பவேண்டும். அந்த நினைவூட்டல் கடிதம் அனுப்பி 15நாட்கள் ஆனபிறகும் உங்களுக்கு அவர்கள் தரப்பில் இருந்து பதில்  தரவில்லை என்றால், சட்டப்படியான அறிவிப்பு ஒன்றை அவர்களுக்கு அனுப்ப வேண்டும்.  
அறிவிப்பு அனுப்பி 15 நாட்கள் ஆன நிலையில்   குற்ற விசாரணை முறைச் சட்டம் - 1973, பிரிவு : 2(4)ன் கீழ்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். அல்லது குற்ற விசாரணை முறைச் சட்டம் - 1973, பிரிவு :200ன் கீழ்  நீதிமன்றத்தில் தனி நபர் புகார் மூலம் வ்ழக்கு தொடுத்து  ஆவண நகல்களைப் பெறலாம்

Tuesday, November 19, 2019

ஆன்லைன் - பட்டா மனு செய்யும் முறை

பட்டா மனு செய்யும் முறை ஆன்லைன் ஆகிவிட்டது. இதற்குமுதல், பட்டா மனு செய்ய தேவையான ஆவணங்களை நகல் எடுத்து அன்றைய தேதி வரை EC எடுத்து பட்டா வேண்டி கேட்கும் மனுவை இணைத்து அனைத்தையும், கிராம நிர்வாக அதிகாரி (VAO) அலுவலகத்தில் கொடுக்கும்படி இருந்தது.
இப்போது அம்முறை மாறி,  ஆன்லைன் முறையில் பட்டா மனு செய்யும் வேண்டி உள்ளது, இதற்காக மனு கட்டணம் ரூ.50 வாங்குகிறார்கள். (சில இடங்களில் அதிகமாகவே வாங்குகிறார்கள் ). E.சேவை மையங்கள் மூலமாக மனு செய்ய படுகிறது. (கரண்ட் இல்லை, சர்வர் வேலை செய்யவில்லை, கம்யூட்டர் சரி இல்லை, சார்/மேடம்  லீவு, என்று பல இடர்களை தாண்டித்தான் மனு விண்ணப்பிக்கப்பட்டு, ரசீது பெறப்படுகின்றது.)
பின்னர்  ஆன்லைன் மூலம் மனு செய்த ரசீதை எடுத்து கொண்டு பட்டா வாங்க போகும் நிலத்தின் முழு ஆவணங்களின் நகலையும் எடுத்து கொண்டு பழைய முறைப்படி கிராம நிர்வாக அதிகாரியையோ, சர்வேயரையோ நேரடியாக சந்தித்து, பின் தொடரல் வேண்டும். VAO, சர்வேயர், தலைமை சர்வேயர் – தாசில்தார் என அனைத்து டேபிளுக்கு பேப்பரை நகர்த்துவதும் நாம் தான் செய்ய வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலகர் (VAO), சர்வேயர் மற்றும் வருவாய் துறை ஊழியர்களுக்கு  ஆன்லைனில் நிலுவையில் மனு எதுவும் இருக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது  எனவே ஆன்லைனில் பட்டா மனு செய்துவிட்டு பின்தொடரல் இல்லை என்றாலோ அல்லது தாமதமாக சென்று பார்த்தாலோ மனுக்களை ஆன்லைனிலே தள்ளுபடி செய்து விடுவார்கள். மனு தள்ளுபடிக்கு ஆவணங்கள் லிங்க் இல்லை அல்லது வேறு ஏதாவது காரணங்களையும் சொல்லி இருப்பார்கள். அவ்வாறாயின் ஆன்லைன் மூலம் மீண்டும் மனு செய்தல் வேண்டும்.
பட்டா மாற்றம் கோரும் மனுவினை, முழு புலம் கொண்ட இடங்கள், உட்பிரிவு கொண்ட இடங்கள் என இரண்டு வகையாக பிரிப்பர். முழுபுலம் கொண்ட இடங்களின் (எளிய புரிதலுக்காக, ”கூட்டுப்பட்டா” என்று வைத்து கொள்ளுங்கள்) மனுக்கள் ஆன்லைனில் VAO விடம் சென்றுவிடும். உட்பிரிவு இடங்கள் (எளிய புரிதலுக்காக, ”தனிப்பட்டா” என்று வைத்து கொள்ளுங்கள்) ஆன்லைனில் சர்வே பிரிவுக்கு  சென்றுவிடும். VAO விடம் வந்த முழுபுலம் பட்டா பெயர் மாற்றங்கள் மனுவினை அவர்கள் பட்டா பெயர் மாற்றம் செய்து, கிராம கணக்குகளையும் திருத்தம் செய்து விடுகின்றனர், அதில் எந்தவிதமான சிக்கலும் இல்லை.
சர்வே பிரிவுக்கு செல்லும் உட்பிரிவு மனுவினை தலைமை சர்வேயர் அனுமதி பெற்று, சர்வேயர் ஒருவர் நேரடியாக களத்திற்கு வந்து, இடத்தை சரி பார்த்துவிட்டு உட்பிரிவு பட்டாவுக்கு வழிவகை செய்வார். உட்பிரிவிற்கான வேலைகளை செய்த உடன், சர்வேயர்கள் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு நேரடியாக வந்து A – பதிவேடு – FMB களில் , சிட்டா, கிராம கணக்குகளில் உட்பிரிவை குறித்தல் வேண்டும், ஆனால் சில நேரங்களில் இது விடுபட்டுப்போகின்றது.  அவ்வாறானால்  பட்டா, உட்பிரிவு ஆன்லைனில் மாற்றம் செய்ய பட்டாலும், கிராம கணக்கில் பட்டா மாற்றமே நடக்கவில்லை என்று ஆவணங்கள் சொல்லும். VAO க்கு பட்டா மாறிய விசயமே தெரியாது போய்விடுகிறது. உட்பிரிவு இடங்களின் கிராம கணக்குகளை சர்வேயர் தான் திருத்தும் செய்ய வேண்டும், VAO வுக்கு அந்த உரிமை இல்லை,  ஆகையால் சர்வேயரிடம் அதனை கேட்டு வலியுறுத்துதல் வேண்டும் –  இதில் கவனம் செலுத்துதல் அவசியம்.
வீடு கட்ட, வங்கி கடன் வாங்க, பயிர் கடன் வாங்க, பயிர் இன்சூரன்ஸ்க்காக , வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம் மற்றும் நில எடுப்புக்கு பணம் வாங்க, VAO கையெழுத்துடன்- அ – பதிவேடு, சிட்டா தேவைபடும் அப்பொழுது அதனை கேட்டு சென்றால், உங்கள் பெயரும் உட்பிரிவும், கிராம கணக்கில் திருத்தும் செய்யாமல் இருப்பின் அல்லல் படும் சூழ்நிலை ஏற்படும்.
எனவே பட்டா வாங்க முடிவு செய்தால், ஆன்லைன் பட்டா மட்டும் போதாது, அதனுடன் FMB , அ – பதிவேடு, சிட்டாவில் எல்லாம் பெயர் மற்றும் உட்பிரிவு ஏற்றப்பட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு, அதனை செய்தல் / சரிபார்த்தல் நலம். சில ஊர்களில் அ – பதிவேட்டினையும், FMB யும் ஆன்லைன் மூலமாக சரிபார்க்கலாம்.

நில அளவைகள்(சர்வே பற்றி) தெரிந்து கொள்ளுங்கள்!!

நில அளவைகள்(சர்வே பற்றி) தெரிந்து கொள்ளுங்கள்!!
===========================
சர்வே” பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 7 சங்கதிகள்:
--------------------------
1. சர்வே இரண்டு பிரிவுகளாக மாநில அரசு பிரிக்கிறது.
1. நில அளவை துறை
2. நில வரிதிட்ட துறை
2. புலப்படம், கிராம வரைபடம் எல்லாம் நில அளவை துறையினால் தயாரிக்கப்படுகிறது.
3. “அ” பதிவேடு (A. Register) நில வரி திட்ட துறையினரால் உருவாக்கப்படுகிறது.
4. மாநில அரசின் நில அள வைகளை நகர நில அளவை , நத்தம் நில அளவை, மலை கிராம நில அளவை, மறு நில அளவை, வட்ட அளவில் நாள் தோறும் நடைபெறும் பட்டா மாறுதல் சம்மந்தமான நில அளவைகள் என பிரிக்கப்படுகிறது.
5. 1. கிராம வரைபடம்,
2. D ஸ்கேட்ச் ( நன்செய், புன்செய், மானவளி, நத்தம், புறம்போக்கு பகுதிகளை பிரித்து காட்டும் வரைபடம்)
3. புலப்படம்
4.சர்வே கற்கள் பதிவேடு
5. டிப்போ பதிவேடு ( கிராமத்தில் இருக்கும் ஸ்டாக் வைக்கப்பட்ட கற்கள், நில அளவை சங்கிலி உட்பட
உபகரணங்கள் இருக்கும் டிப்போ ) போன்ற ஆவணங்ள் கிராம நில அளவையில் இருக்கும்.
6. ஒவ்வொரு நில உரிமையாளரும் சர்வே செய்து போடப்பட்ட கற்களை பராமரிக்க வேண்டும். எல்லை கல்லை பாதுகாப்பது , அந்த கல் தொட்டு கொண்டு இருக்கும் புலன்களுடைய பட்டாதரரின் கூட்டு பொறுப்பு ஆகும்.
7. மத்திய அரசினால் ஆறுகள், ஏரிகள், மலைகள், சாலைகள் கோவில்கள் விளக்கி காட்டி ஸ்தல சர்வே செய்வார்கள், இவை கனிம வள ஆராய்ச்சிக்கு மிகவும் பயன்படும்.
எப்பொழுதெல்லாம் நிலத்தில் சர்வே செய்யப்படும்?
1. நிலவரி திட்டம் செயல்படுத்தப்படும் பொழுது, இறுதியாக 1984 ல் இருந்து 1987 வரை நடந்தது.
2. பிறகு நத்தத்தில் நிலவரி திட்டம் செயல்படுத்தப்படும் பொழுது , இறுதியாக 1990 களில் நடந்தது.
3. சர்வே புலத்தில் புதிய சர்வே புலம் அமைக்கும் போதும், சர்வே புலத்தின் எல்லையில் மாற்றம் செய்ய நேரிடும் போதும்.
4. கிராம வரைபடம் வரையும் போது திருத்தம் கண்டுப்பிடிக்கப்பட்டு எல்லை மாற்றம் செய்யப்படும் பொழுதும்
5. புறம்போக்கு நிலத்தில் எல்லைகள் மாறுதல், புறம்போக்கு தரிசாக மாறும் பொழுது, தரிசு புறம்போக்காக மாறும் பொழுதும்.
6. நிலத்தை அரசு ஆர்ஜிதம் செய்யும் போது நிலத்தின் உட்பிரிவுகளை ஒன்றாக்கி புறம்போக்காக மாற்றும் பொழுது.
7. அளவுப்பிழை, விஸ்தீரணப் பிழை, உருவப்பிழை பட்டாதரரின் நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் அதனை சரி செய்யும் பொழுது.
8. பராமரிப்பு பணிகளின் போது புதிய சர்வே புலம் அமைக்க வேண்டி இருந்தால் நில அளவை, சர்வே செய்யப்படும்.
9. இரண்டு நில உரிமையாளருக்கு நில அளவுகளில் தகராறு வரும்பட்சத்திலும் நிலத்தை சர்வே செய்ய வேண்டி இருக்கும்.
சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :
1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.
2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).
3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.
4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.
5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.
6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.
7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.நிலத்தை அளக்கும் அளவு முறைகள் பற்றி …
நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.
1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,
2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை
3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்
பாரம்பரிய வழக்கம், நம் மண்ணில் ஆரம்ப காலம் தொட்டு புழக்கத்தில் இருக்கிறது. பிரிட்டிஸ் அளவுகள், வெள்ளைகாரன் நாட்டை ஆண்டபோது நில நிர்வாகத்தை 90% அவர்கள் உருவாக்கியதால், அதன் அளவு முறைகள் இன்றும் நடைமுறையில் உள்ளன.
உலகம் முழுக்க ஒரே அளவுகள் கொண்டுவந்தால் வியாபாரத்தில் வசதியாக இருக்கும் நோக்கில் மெட்ரிக் அளவுமுறையும் பயன் படுத்தி கொண்டு இருக்கின்றோம்.
• இன்றைக்கும் விருதுகள், சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் வீட்டுமனைகள் குழி கணக்கில் தான் விற்பனை செய்யபடுகிறது.
• கொங்கு பகுதிகளில் சென்ட் என்றும், சென்னையில், கிரவுண்டு என்றுமே வீட்டுமனைகள் புழக்கத்தில் இருக்கிறது.
• நாட்டு வழக்கு அளவுகளில் பிரிட்டிஸ் அளவு முறைகளில் தமிழகம் முழுவதும் உள்ள விவசாய நிலங்கள் பரிமாற்றங்கள் நடக்கின்றன.
• ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.
வேலி

• 1வேலி – 2௦ மா
• 1வேலி – 6.17 ஏக்கர்
• 1வேலி – 5காணி
மா

• 1மா – 1௦௦ குழி
• 2௦மா – 1வேலி
• 3மா – 1ஏக்கர்
• 3மா – 1௦௦ சென்ட்
• 7மா – 1ஹெக்டேர்
சதுமீட்டர்

• 1௦,௦௦௦ சதுர மீட்டர் – 1ஹெக்டேர்
• 4046.82 சதுர மீட்டர் – 1ஏக்கர்
• 4௦.5 சதுர மீட்டர் – 1சென்ட்
• 222.96 சதுர மீட்டர் – 1கிரவுன்ட்
• 1சதுர மீட்டர் – 1௦.76391 சதுர அடி
• ௦.௦929 சதுர மீட்டர் – 1 சதுர அடி
• 1௦௦ சதுர மீட்டர் – 1ஏர்ஸ்
• ௦.8361 சதுர மீட்டர் – 1குழி
• 1௦1.17 சதுர மீட்டர் – 121 குழி
செயின்
• 1செயின் – 66அடி
• 1செயின் – 1௦௦ லிங்க்
• 1௦செயின் – 1 பர்லாங்கு
• 1செயின் – 22 கெஜம்
ஏக்கர்
• 1ஏக்கர் – 43,56௦ சதுர அடிகள்
• 1ஏக்கர் – 1௦௦ சென்ட்
• 1ஏக்கர் – 16௦ square Roads
• 1ஏக்கர் – 1.1834 Square Arpents
• 1ஏக்கர் – 1௦ Square Chains
• 1ஏக்கர் – 16௦ Perches
• 1ஏக்கர் – 16௦ Poles
• 1ஏக்கர் – 4௦46.82 சதுர மீட்டர்
• 2ஏக்கர் 47சென்ட்- 1 ஹெக்டேர்
• 1ஏக்கர் – ௦. 4௦469 ஹெக்டேர்
• 1.32ஏக்கர் – 1 காணி
• 64௦ஏக்கர் – 1 சதுர மைல்
• 2.5ஏக்கர் – 1 லட்சம் சதுர லிங்ஸ்
• 6.17ஏக்கர் – 1 வேலி
• 1ஏக்கர் – 3 மா
• 1ஏக்கர் – ௦. 4௦4694 ஹெக்டேர்
• 1ஏக்கர் – 4௦.5ஏர்ஸ்
• 1ஏக்கர் – 4840 சதுர கெஜம்
• 64௦ ஏக்கர் – 1 சதுர மைல்
• 8.64ஏக்கர் – 1வள்ளம்
கெஜம்
• 1கெஜம் – 3அடி
• 22கெஜம் – 1 செயின்
• 22கெஜம் – 66 அடி
• 1கெஜம் – ௦.9144 மீட்டர்
• 1.௦93613 – 1மீட்டர்
ஏர்ஸ்
• 1௦ ஏர்ஸ் – ௦2471 சென்ட்
• 1ஏர்ஸ் – 1௦76 சதுர அடி
• 1ஏர்ஸ் – 2. 47 சென்ட்
• 1ஏர்ஸ் – 1௦௦ ச.மீ
• 1௦௦ ஏர்ஸ் – 1ஹெக்டேர்
• ௦. 4௦5 ஏர்ஸ் – 1 சென்ட்
ஹெக்டேர்
• 1ஹெக்டேர் – 2 ஏக்கர் 47 சென்ட்
• 1ஹெக்டேர் – 1௦,௦௦௦ ச.மீ
• 1ஹெக்டேர் – 1௦௦ ஏர்ஸ்
• ௦௦4௦ ஹெக்டேர் – 1சென்ட்
• 1ஹெக்டேர் – 247 சென்ட்
• 1ஹெக்டேர் – 1௦7637.8 சதுர அடிகள்
• ௦. 4௦5 ஹெக்டேர் – 1ஏக்கர்
சென்ட்
• 1சென்ட் – 435.சதுரஅடிகள்
• 1சென்ட் – 4௦.5 சதுர மீட்டர்
• 1சென்ட் – 3குழி
• 1சென்ட் – 48.4 சதுர குழி
• 1௦௦ சென்ட் – 484௦ சதுர குழி
• 1 சென்ட் – ௦௦4௦ ஹெக்டேர்
• 1 சென்ட் – ௦. 4௦5 ஏர்ஸ்
• 1சென்ட் – 4௦. 46 சதுர மீட்டர்
• 2. 47 சென்ட் – 1ஏர்ஸ்
• 1 சென்ட் – 1௦௦௦ சதுர லிங்ஸ்
• 5.5 சென்ட் – 1கிரவுன்ட்
• 1.5 சென்ட் – டிசிமல்
• 1சென்ட் – ௦.௦௦4௦47 ஹெக்டேர்
• 1௦ சென்ட் – ௦.௦4௦47 ஹெக்டேர்
• ௦.௦2471சென்ட் – 1 ஏர்ஸ்
• ௦.௦2471சென்ட் – 1௦ ஏர்ஸ்
• 5.5 சென்ட் – 24௦௦ சதுர அடிகள்
• 5.5 சென்ட் – 1 மனை
• 33.௦6சென்ட் – 1 மா
• 6.61 சென்ட் – 1 வேலி
• ௦.7 சென்ட் – 1 குழி – 3௦௦ சதுர அடி ( மதுரை)
• ௦.7. சென்ட் – 3௦௦ சதுர அடிகள் ( மதுரை )
சென்ட்
• 11.௦ சென்ட் – 4800 சதுர அடிகள்
• 11.௦ சென்ட் – 2மனை
• 56 சென்ட் – 1குருக்கம்
• 56 சென்ட் – 24,௦௦௦ சதுர அடிகள்
• 2. 47 சென்ட் – 1௦76 சதுர அடிகள்
• 4.7 சென்ட் – 1வீசம்
கிரவுண்ட்
• 1கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்
• 1கிரவுண்ட் – 24௦௦ சதுர அடிகள்
• 1கிரவுண்ட் – 5.5 சென்ட்
மீட்டர்
• 1 மீட்டர் – 3.281 அடிகள்
• 161௦ மீட்டர் – 1 மைல்
• 1௦௦௦ மீட்டர் – 1கி.மீ
• 1௦௦௦ மீட்டர் – ௦.62 மைல்
• ௦.9144 மீட்டர் – 1 கெஜம்
• 1 மீட்டர் – 39.39 இஞ்ச்
• 2௦1.16 மீ – 8 பர்லாங்கு
• 1 மீட்டர் – 1.௦93613 கெஜம்
• ௦.3௦48 – 1அடி
• 1௦ மீட்டர் – 32. 8௦84 அடிகள்
அடி சதுர அடிகள்
• 435.6 சதுர அடிகள் 1சென்ட்
• 24௦௦ சதுர அடிகள் 1கிரவுண்ட்
• 57,6௦௦ சதுர அடிகள் 1காணி
• 3.28 அடி 1மீட்டர்
• 1அடி 12 இன்ச்
• 1அடி 3௦. 48 செ. மீ
• 528௦ அடி 1 மைல்
• 328௦ அடி 1கி. மீ
• 1௦76 சதுர அடிகள் 1 ஏர்ஸ்
• 1௦.76391 சதுர அடிகள் 1சதுர மீட்டர்
• 1சதுர அடி ௦.௦929 சதுர மீட்டர்
• 24௦௦ சதுர அடிகள் 1 மனை
• 1 சதுர அடிகள் 144 சதுர அங்குலம்
• 43,56௦ சதுர அடிகள் 1 ஏக்கர்
• 1 சதுர அடி 144 சதுர அங்குலம்
• 1௦89 சதுர அடிகள் 33 அடி
• 1௦7637. 8 சதுர அடிகள் 1 ஹெக்டேர்
• 33 அடி 1 குந்தா
• 66௦ அடி 1 பர்லாங்கு
• 66௦ அடி 22௦ கெஜம்
• 66 அடி 1 செயின்
• 66 அடி 1௦௦ லிங்க்
• ௦.66 அடி 1 லிங்க்
• ௦.66 அடி 7.92 அங்குலம்
• 3 அடி 1 கெஜம்
• 1௦76 சதுர அடிகள் 2. 47 சென்ட்
• 66 அடி 22 கெஜம்
• 3.28 அடி 1.௦93613 கெஜம்
• 1 அடி ௦.3048 மீட்டர்
• 3.28௦84 அடி 1 மீட்டர்
• 32. 8௦84 1௦ மீட்டர்
• 1 சதுர அடி ௦.௦929௦ சதுர மீட்டர்
• 1௦ சதுர அடிகள் ௦.929௦ சதுர மீட்டர்
• 1௦௦ சதுர அடிகள் 9.29௦ சதுர மீட்டர்
• 2௦௦ சதுர அடிகள் 18.58௦ சதுர மீட்டர்
• 5௦௦ சதுர அடிகள் 46. 45 சதுர மீட்டர்
• 1௦7.6939 சதுர அடிகள் 1௦ ச. மீ
• 215.278 2௦சதுர மீட்டர்
• 538.195 சதுர அடிகள் 1௦௦ சதுர மீட்டர்
• 4,356 சதுர அடிகள் 1௦ சென்ட்
• 48௦௦ சதுர அடிகள் 1 மிந்திரி
• 24, 4௦௦ சதுர அடிகள் 1குறுக்கும்
• 144 சதுர அடிகள் 1குழி
சட்டத்தின் பார்வையில்
வக்கீல் ரமேஷ் பாண்டியன்
நில அளவையர் கடமைகள்
நில அளவையர் நிலத்தை அளக்கும் முறைகள்
வருவாய் நிலை ஆணைப்படி

சர்வேயர் நிலத்தை உட்பிரிவு செய்யும் முறைகள் 

RTI facebook & Blogspot

01. www.facebook.com/trdurai.kamaraj
02. www.facebook.com/thathuwam.ramasamy
03. தமிழக அரசின் சட்டங்கள் அனைத்தும் படிக்க, பதிவிறக்கம் செய்ய ஓர் மைய அரசின் இணையதளம் உள்ளது
https://indiacode.nic.in/handle/123456789/2507/
04. https://thoduvanam-nalvinai.blogspot.com
05. https://rtigovindaraj.blogspot.com
06. www.tnroadgl.com
07.  https://paranjothipandian.in

08. https://www.facebook.com/laaw28
09. http://advocateprasannakumar.blogspot.com
10. krkpondicherry.blogspot.com
11. 



வருவாய்த்துறை மாவட்ட அலுவலக நடைமுறை நூல் Revenue : District Office Manual
**********************************
பாகம் -1 http://bit.ly/2MqmYPc
பாகம் – 2 http://bit.ly/2MuD5v5
-------------------------
தாலுகாக் கணக்குகளின் திருத்தப்பட்ட நடைமுறை நூல் TALUK CORRECTED ACCOUNTS
https://www.facebook.com/trduraikamaraj/posts/1800250590118817
--------------
கிராமக் கணக்குகள் நடைமுறை நூல் VILLAGE CORRECTED ACCOUNTS
https://www.facebook.com/trduraikamaraj/posts/1800250073452202
----------
வருவாய்த்துறை வாரிய நிலை ஆணைகள் Revenue Standing Order-
https://www.facebook.com/trduraikamaraj/posts/1800243446786198


வருவாய்த்துறை வாரிய நிலை ஆணைகள் Revenue Standing Order-
**************************
(தொகுதி 1முதல் 4 வரை - தமிழில்)
தொகுதி 1 http://bit.ly/2ky8xyG
தொகுதி 2 http://bit.ly/2kjH6bI
தொகுதி 3 http://bit.ly/2maMhLu
தொகுதி 4 http://bit.ly/2kzfEqD

சட்டம் பற்றிய விளக்கம் மற்றும் ஆலோசனைகள்
https://www.facebook.com/pg/Rbvadvocate



Monday, November 18, 2019

RTI - Sentence Formats

தகவல் பெரும் உரிமை சட்டம் - வார்த்தை கோர்வைகள் :
01. சான்றொப்ப நகல்கள் பெற கட்டணம் செலுத்த வேண்டியிருப்பின் உரிய முறையில் தெரிவிக்கும் பட்சத்தில் செலுத்த தயாராக உள்ளேன் என்பதை உறுதியளிக்கிறேன் .

02. பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் ,
      மேற்பொறியாளர் அலுவலகம் ,
      தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் ,
      ராஜகம்பீரம் .

03. 

5976 - ஏனைய உரிமையாளர்களின் உரிமை நீக்கப்படாத நிலையில், கூட்டுரிமையாளரிடம் இருந்து சொத்து வாங்கியவர், கூட்டுக் குடும்ப சொத்தில் உரிமை கோர இயலாது, AS 941 / 2009, 01.02.2019, MHC, Thanks to Satta Kathir, 06.2019



04.

05.

5943 - நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு கட்டுகளை, தகவல் சட்டத்தில், ஆவணங்கள் வழங்கலாம்.அவற்றை தகவல் கேட்பவர் பார்வையிடலாம், மேலும் உரிய கட்டணம் கட்டி நகல் பெறலாம், 19.09.2017


06.

பெறுனர்
உயர் திரு. பொது தகவல் அலுவலர் மற்றும் வட்டார அலுவலர் அவர்கள்,
காட்டுமன்னார்கோவில் வட்டார அலுவலகம்,
காட்டுமன்னார்கோவில் அலுவலகம்,
கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டம்,(காட்டுமன்னார்கோவில் தாலுக்கா) திருமுட்டம் வட்டம், குணமங்கலம் கிராம பஞ்சாயத்தில் உள்ள வரவு மற்றும் செலவுகள் கணக்குகள் கொண்ட அனைத்து ஆவணங்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 2 J ன் கீழ் நேரடியாக பார்வையிட அனுமதி வழங்கவும்.

07.

5921 - வருவாய் துறையில் உள்ள அனைத்து ஆவணங்களும் பொது ஆவணங்களே, தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் வழக்கு எண். SA 2631/E/2016 ஆணை நாள்.05.06.2018, நன்றி ஐயா. வாசுதேவன்.


08.

5884 - கூட்டுப்பங்குதாரர்களுக்கு உரிய வாய்ப்பளிக்கப்படாமல் செய்யப்பட்ட உட்பிரிவு ரத்து செய்யப்படுகிறது, வருவாய் கோட்டாட்சியர், திருப்பூர் 25.03.2007


09.

5872 - தமிழ்நாடு ஆட்சிமொழி சட்டம் 1956 பிரிவு 4- ன் கீழ் ஆங்கில மனுவை தமிழில் மொழி பெயர்த்து கோருதல், நன்றி ஐயா. Chandru Karur


10.

5867 - சட்ட விரோத காவல், 5,00,000 ஐந்து இலட்சம் ரூபாய் இழப்பீடு, Case No. 7844 / 2009, 19.03.2018, SHRC, நன்றி ஐயா. Tamil Raajendiran


11.

5865 - குற்ற விசாரணை முறை சட்டம் 1973-ன் பிரிவு 37 & 43-ன் கீழ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை கைது செய்ய கோரி மனு, 31.03.2018, நன்றி ஐயா. வாசுதேவன்.


12.



மின் துறை சம்பந்தமான  அனைத்து பதிவுகளின் தொகுப்பு



Monday, November 11, 2019

Revenue Free House Site Assignment Patta

Revenue – Assignment of House sites

The policy of the Government is to grant free house–sites to the houseless poor. Based on this, house site assignment is given to eligible house-less poor from the available land set apart for village sites under Revenue Standing Order 21. As per R.S.O.21 (6), Revenue Divisional Officer/ District Collector are empowered to change the classification of various types of unobjectionable Government poramboke lands when the existing village site is not sufficient for the needs of these house–less poor persons. Assignable lands, except objectionable porambokes, such as water course, are assigned to the eligible house–less poor persons.
Free house–sites are assigned to house-less people having an annual income below Rs.30,000/- in Rural areas and below Rs.50,000/- in Urban areas. House sites are assigned only in favour of the woman member of the family. As per the existing rules, three cents in villages, one and half cents in Municipal areas and one cent in Corporation areas are assigned to each eligible household.
The Monetary limits (Cost of assigned house–site) upto which the different level of officers in Revenue department can assign house-sites as per G.O.(Ms)No.248, Revenue Department, Dated : 28.07.2009 are as follows:-
Monetary Limits for Assignment of Lands
Sl.No Officers Monetary Limit (Land cost)
1 Tahsildar Rs.30,000/-
2 Revenue Divisional Officer Rs.50,000/-
3 District Revenue Officer Rs.1,00,000/-
4 District Collector Rs.4,00,000/-
5 Commissioner of Land Administration Rs.5,00,000/-
6 Government Above Rs.5,00,000/-

In keeping with the priority of provision of house sites, In Pudukkottai District had issued from the year 2011-2012 to 2017-2018, 48,826 free house-site pattas having been issued as detailed below:-


Sl.No Taluk Officer Mobile Number
1 Pudukkottai Tahsildar 9445000641
2 Alangudi Tahsildar 9445000640
3 Karambakudi Tahsildar 9787598760
4 Gandarvakottai Tahsildar 9445000642
5 Thirumayam Tahsildar 9445000643
6 Aranthangi Tahsildar 9445000644
7 Avudaiyarkovil Tahsildar 9445000645
8 Manamelkudi Tahsildar 9445000646
9 Illupur Tahsildar 9445000639
10 Viralimalai Tahsildar 9445167797
11 Kulathur Tahsildar 9445000638
12 Ponnamaravathy Tahsildar 9443835778


வீட்டு மனை மற்றும் நில ஒப்படை

ஒப்படை (ASSIGNMENT):
வீடு மற்றும் நிலமற்ற ஏழை மக்களுக்கும் நலிந்த பிரிவினருக்கும், நாட்டுக்கு  உழைத்திட்ட போர் வீரர்கள் குடும்பத்தினருக்கும் மற்ற இதர தகுதி வாய்ந்த பிரிவினருக்கும் அரசு நிலங்களை வீட்டு மனைகளாகவோ அல்லது விவசாயத்திற்காக வழங்குவதோ நில ஒப்படை எனப்படும்.
வீட்டு மனை ஒப்படை:
வருவாய் நிலை ஆணை எண் 21 பிரிவு 1ன்படி பொது உபயோகத்திற்கு தேவைப்படாத அரசு நிலங்களை வீட்டுமனை இல்லாதவர்களுக்கு ஒப்படை செய்வது வீட்டுமனை ஒப்படை எனப்படும்.
வீட்டு மனை ஒப்படை செய்வதற்கு முன்பு கீழ்க்காணும் முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
1. வீட்டு மனை இல்லாத தகுதி வாய்ந்த நபர்களை கிராம வாரியாக தயார் செய்ய வேண்டும்.
2. தகுதியான நபர்களிடமிருந்து வரப்பெறும் மனுக்களை ஆய்வு செய்து அரசு விதி முறைகளுக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில் ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்.
3. வீட்டுமனை ஒப்படைக்கு தகுதியான ஆட்சேபனையற்ற அரசு நிலங்களை தேர்வு செய்து கொள்ளவேண்டும்.
4. தகுதியான நிலங்களை தேர்வு செய்து முன் கூட்டியே வரைபடம் தயார் செய்து நில அளவர் மூலம் பிளாட்டுகளாகப் பிரித்து கற்கள் நடப்பட வேண்டும்.
வருவாய் நிலை ஆணை எண் 21பத்தி 2 பிரிவு III ன் படி வட்டாட்சியரிடம் வீட்டு  மனைக்கான விண்ணப்பத்தினை அளித்திடலாம்.
வறுமை கோட்டிற்கு கீழ் வாழக் கூடியவர்கள் இலவச வீட்டு மனை பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். அரசாணை நிலை எண்.287 வருவாய் (நிழு 1(2) துறை நாள் 31.5.2000ன்படி குடும்ப ஆண்டு வருமான வரம்பு கிராமப்பகுதிகளில் ரூ.16,000/-எனவும் நகர்புறப்பகுதிகளில் ரூ.24,000/-எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச வீட்டு மனை கோரும் நபருக்கு வீட்டுமனை கோரும் கிராமத்திலோ அல்லது வேறு கிராமங்களிலோ வீட்டுமனையோ வீடோ இருக்கக் கூடாது. வருவாய் நிலை ஆணை எண்.21 பத்தி 2 பிரிவு VIIல் 10 செண்ட் கொண்ட மனைக்கட்டுகளாக பிரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசாணை எண் 2324 வருவாய்த் துறை நாள் 16.11.90ன் படி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் 1 செண்டும் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் ½ செண்டும் வழங்கலாம், அரசாணை எண் 1657 வருவாய்த்துறை நாள்: 11.12.91ன் படி கிராமப்புறங்களில் அதிக பட்சமாக 3 செண்டும் வீட்டுமனை ஒப்படை செய்திடலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரை முறை அதிகபட்சம் என்பதை கணக்கிற் கொள்ள வேண்டும் இதைவிட குறைவாகவும் ஒப்படை செய்திடலாம்.
வீட்டுமனை ஒப்படை வழங்கிட அதிகாரம் பெற்ற அலுவலர்கள்:
வ.அலுவலர்    மதிப்புள்ள நிலம்
1.வட்டாட்சியர் ரூ.10,000/-வரை
2.கோட்டாட்சியர் ரூ.20,000/-வரை
3.மாவட்ட வருவாய் அலுவலர்   ரூ.50,000/-வரை
4.மாவட்ட ஆட்சியர்  ரூ.2,00,000/-வரை
5.நில நிர்வாக ஆணையர் ரூ.2,50,000/-வரை
6.  அரசு             ரூ.2,50,000/- க்கு மேல்
  வீட்டுமனை ஒப்படை செய்திட ஆற்ற வேண்டிய பணிகள்:
வட்டாட்சியர் அலுவலகத்தில் கீழ்கண்ட பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும்.
1. ஒப்படை மனுக்கள் பதிவேடு (வருவாய் நிலை ஆணை எண்.21 (XXII) ல் காட்டியவாறு)
2. ஒப்படை பதிவேடு
வரப்பெற்ற மனுக்களை பதிவு செய்து கொண்டு வரிசை எண்ணிடப்பட்ட மனுக்களை வருவாய்
ஆய்வருக்கு விசாரணைக்கு அனுப்பிட வேண்டும்.
சரகவருவாய் ஆய்வாளர் வரப்பெறும் மனுக்களைப் பெற்று.
1) கிராமவாரியாக பிரித்து விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும்.
2) தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு வீட்டுமனை ஒப்படை செய்வதற்கு ஆட்சேபனை உள்ளதா என கண்டறிவும் பொருட்டு வருவாய் நிலை ஆணை எண் 21க்கு XXV வது இணைப்பில் கண்டவாறு ஏ1 நோட்டீஸ் தயார் செய்து கிராமசாவடி மற்றும் பொது இடங்களில் விளம்பரம் செய்ய வேண்டும் பிரஸ்தாப ஸ்தலத்தில் 15 நாட்களுக்கு ஒட்டி வைக்க வேண்டும்.
3) மனுதாரர்கள் கிராம பொது மக்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் விசாரிக்கப்பட வேண்டும்.
4) வீட்டுமனை ஒப்படை செய்ய உள்ள நிலம் பஞ்சாயத்துக்கு/ ஊராட்சிக்கு ஒப்படைக்கப்பட நிலமாக இருப்பின் வருவாய் நிலை ஆணை எண்.21(2)(VII) ன்படி ஒப்படை வழங்க ஆட்சேபணை பற்றிய தீர்மானம் பெற வேண்டும்.
5) வருவாய் நிலை ஆணை எண் 21 XXVI வது இணைப்பில் கண்ட படிவத்தில் மூன்று பிரதிகளில் அறிக்கை தயார் செய்து வட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். அறிக்கையுடன் கிராம கணக்கு.”அ” பதிவேடு நகல், அடங்கல் நகல், கூட்டு வரைபட நகல் பஞ்சாயத்து தீர்மான நகல், புலச்சுவடி நகல் வரைபட நகல், மரங்கள் கட்டிடங்கள் இருந்தால் அதன் மதிப்பீடு, விலை மதிப்பு  விற்பனை புள்ளி விவரம் முதலிய விவரங்கள் இணைக்கப்பட வேண்டும் நகல்கள் அனைத்தையும் சரிபார்த்து கையொப்பமிடப்பட வேண்டும்.
6) நில மதிப்பு நிர்ணயம் செய்திடும் போது சந்தை மதிப்புப்படி நிலமதிப்பு நிர்ணயம் செய்ய வேண்டும். நில ஒப்படை கோரிய தேதிக்கு முன்னர் நடைபெற்ற ஒராண்டுக்கான விற்பனையை கணக்கிற்  கொள்ள வேண்டும். ஒராண்டுக்குள் விற்பனை ஏதும் இல்லையாயின் மேலும், இரண்டு வருடங்களுக்கு விற்பனை புள்ளி விவரங்கள் எடுத்து அதன் அடிப்படையில் நிர்ணயம் செய்திட வேண்டும். விற்பனை புள்ளி விவரம் கிடைத்த ஆண்டிற்கு பின்னர் வருடம் ஒன்றுக்கு 12மூ ஊக்க மதிப்பு உயர்வு அளித்து நிலமதிப்பு நிர்ணயம் செய்ய வேண்டும். மூன்று ஆண்டுகளுக்குள் நில கிரயம் ஏதும் இல்லையெனில் சார்பதிவாளர் அலுவலக வழிகாட்டிப் பதிவேட்டின் விலையை அனுசரித்து நிலமதிப்பு நிர்ணயம் செய்திடலாம்.
வட்ட அலுவலகப்பணி:

        வருவாய் ஆய்வாளரிடமிருந்து கிடைக்கப்பெற்ற பிரேரணையை வட்டாட்சியர் அலுவலகத்தில் பரிசீலனை செய்து வட்டாட்சியர் பிரஸ்தாப ஸ்தலத்தை பார்வையிட்டு, அந்நிலம் ஒப்படை வழங்க தகுதியானது எனில் விலை மதிப்பு நிர்ணயம் செய்து வரைபட நகலுடன் கோட்டாட்சியரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். கோட்டாட்சியரால் விலை மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்ட பிரேரணையை மீளப்பெற்று பிரஸ்தாப நிலத்தின் மதிப்பு தன்னுடைய அதிகார வரம்பிற்குள் இருந்தால் வட்டாட்சியர் தானே ஒப்படை உத்தரவு பிறப்பித்திடலாம். அவ்வாறு இல்லையெனில் எந்த அதிகாரியின் அதிகார வரம்பிற்குட்பட்டதோ அந்த அதிகாரியின் ஒப்புதல் பெற்று பட்டா வழங்க வேண்டும். வருவாய் நிலை ஆணை எண் 21 XIX வது இணைப்பில் உள்ள படிவத்தில்  வட்டாட்சியர் தானே கையெழுத்திட திட்டு ஒப்படை ஆணையை பிறப்பிக்க வேண்டும். ஆணைபிறப்பிக்கப் பட்ட படிவத்தில் உள்ள நிபந்தனைகள் போக வேறு நிபந்தனைகள் வழங்கப்பட வேண்டியிருப்பின் அதனையும் அதில் தவறாது குறிப்பிட வேண்டும்.
பட்டா வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட வட்ட / கிராம கணக்குகளில் உரிய மாறுதல்கள் உடனடியாக செய்து முடிக்க வேண்டும். வட்ட ஒப்படை பதிவேடு கிராம ஒப்படை பதிவேடு ஆகியவற்றில் பதிவு செய்து கிராமப்பதிவேட்டில் வருவாய் ஆய்வரும் வட்ட பதிவேட்டில் வட்டாட்சியரும் மேலொப்பம் செய்திட வேண்டும். குறுவட்ட நில அளவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய இருவரும் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனையை அடையாளம் காட்டி கொடுக்க வேண்டும். (நிலநிர்வாக ஆணையர் கடித எண்எப் 1/26624/93 நாள்:11.12.93)
ஒப்படை ஆணையில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் அல்லது துணை ஒப்பந்த ஏற்பாடுகளில் உள்ள நிபந்தனைகள் மீறப்பட்டிருந்தால் மேற்படி நிலத்தில் ஒப்படை ரத்து செய்யும் அதிகாரம் கோட்டாட்சியரின் ஆணையின் பேரில் நிறைவேற்றப்பட வேண்டும். (வருவாய் நிலை ஆணை எண்.21 (7)(III) )
வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கும் , அவர்கள் வீட்டுமனை இல்லாதவர்களாக இருந்தால் வீட்டுமனை ஒப்படை வழங்கிடலாம். ஆனால் அவர்களின் தகுதி நிலைக்கேற்ப மேற்படி வீட்டு மனையின் சந்தை மதிப்பில் ஒரு மடங்கோ அல்லது இருமடங்கோ வசூல் செய்து கொண்டு ஒப்படை வழங்கலாம். அரசு ஊழியர்கள் என்றால் அரசின் அனுமதி பெற்ற பின்னரே ஒப்படை வழங்க வேண்டும்.
(அரசு கடித எண்.631 வருவாய்த்துறை நாள்:17.4.90)
வருவாய் நிலை ஆணை எண் 21ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரம் பாதிக்கப்படாத வகையில் ஒப்படை பெற்ற நிலங்கள்  அதில் வீடு கட்டும் பொருட்டு கடன் பெறுவதற்காக கீழ்கண்ட நிறுவனங்களில் ஈடு வைக்க அனுமதிக்கலாம்.
1. அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள்
2. கூட்டுறவு வங்கிகள்
3.மத்திய / மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள வீட்டு வசதி நிதி கழகங்கள்.
4. அரசு பொறுப்பில் உள்ள தொழில் நிறுவனங்கள்
(அரசாணை எண்.1877 வருவாய்த்துறை நாள்: 30.9.88)
வீட்டுமனை மற்றும் நில ஒப்படைகளில் செய்யக் கூடியதும் / செய்யக்கூடாததும்:
1) வீட்டு மனை ஒப்படை குடும்பத்தில் உள்ள பெண்கள் பெயரிலேயே பட்டா வழங்கப்பட வேண்டும். (அரசாணை எண்.1380 வருவாய்த்துறை நாள்:22.8.89) பெண்கள் இல்லாத குடும்பத்தில் ஆண்கள் பெயரில் பட்டா வழங்கிடலாம்.
2) ஒப்படை வழங்கப்பட உள்ள நிலம் தடையாணை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க கூடாது.
3) ஒப்படை வழங்கும் ஆணை படிவத்தில் நிபந்தனைகள் கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டும். (வருவாய் நிலை ஆணை எண்.21 பத்தி 7 உட்பிரிவு III)
4) பஞ்சாயத்து தீர்மானம் பெறப்பட வேண்டும்.
5) வீட்டு மனை ஒப்படை பெற்ற இனங்களில் ஓராண்டுக்குள் வீடு கட்டப்பட வேண்டும்.
6) ஒப்படை பெற்ற 10 ஆண்டுகளுக்கு பிறகு நிலத்தை விற்றாலும் அரசின் முன் அனுமதி பெற வேண்டும்.(அரசாணை எண் 2485 வருவாய்த்துறை நாள்:9.11.79) வழங்கப்படும் பட்டாவில் இந்த நிபந்தனை கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும். (நிலநிர்வாக ஆணையர் கடித எண் எப்1/ 52050/82 நாள்: 6.5.83)
7) நில ஒப்படை பெற தக்கவரால் வளர்க்கப்பட்ட மரங்கள் என மெய்ப்பிக்கப்பட்டவை தவிர ஏனைய மரங்களுக்கு உரிய விலை மதிப்பு தொகையை ஒப்படை கோரும் நபருக்கு இறுதி ஆணைகள் பிறப்பிப்பதற்கு முன்னதாகவே அவரிடமிருந்து வசூலித்திட வேண்டும். (வருவாய் நிலை ஆணை எண்.15,14)
8) ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களின் பெயரில் கூட்டாக நில ஒப்படை செய்யக்கூடாது.
9)(i)மாவட்ட தலைநகர் மற்றும் 2 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கட்தொகை கொண்ட நகரப்பகுதிகளில் - 8 கிலோமீட்டர் எல்லைக்குள்ளாகவும்.
(ii) ஒரு லட்சம் முதல் 2 லட்சத்திற்குட்பட்ட மக்கட்தொகை கொண்ட நகர்பகுதிகளில் - 5 கிலோமீட்டர் எல்லைக்குள்ளாகவும்.
(iii) 50,000முதல் 1 லட்சம் வரை மக்கட்தொகை கொண்ட நகரப்பகுதிகளில் - 3கிலோமீட்டர் எல்லைக்குள்ளாகவும்.
iV) 50,000 க்கு உட்பட்ட மக்கட்தொகை கொண்ட நகரப்பகுதிகளில் 1-5 கிலோ மீட்டர் எல்லைக்குள்ளாகவும்.
வீட்டு மனை ஒப்படை செய்திட கூடாது. நிர்ணயிக்கப்பட்ட எல்லைப்பகுதி என்பது நகராட்சி எல்லையிலிருந்து அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும்.
நில ஒப்படை
வருவாய் நிலை ஆணை எண்.15,5வது பத்தியில் கண்டவாறு எந்த நிலம் ஒப்படை செய்யப்பட்டால் ஆட்சேபனை இல்லாமல் இருக்குமோ,அந்த ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தினை நிலமற்ற ஏழைகளுக்கு விவசாயம் செய்யும் நோக்கில் ஒப்படை செய்வது “நில ஒப்படை” ஆகும். ஒதுக்கி வைக்கப்படாத ஆனால் தீர்வை விதிக்கப்பட்ட நிலங்கள் மட்டுமே பொதுவாக ஒப்படை செய்யப்படுகிறது. (வருவாய் நிலை ஆணை எண்.15 பிரிவு II). நீர் நிலை  புறம்போக்கு, மேய்கால், சுடுகாடு போன்ற புறம்போக்கு நிலங்களை அரசு ஆணையின்றி ஒப்படை செய்யக்கூடாது.
நேர்முக விவசாயத்தில் ஈடுபடக் கூடிய நிலமற்ற ஏழைகள் மட்டுமே இலவச நில ஒப்படை பெற தகுதியானவர்கள். இலவச நிலஒப்படை கோரும் நபருக்கு நில ஒப்படை கோரும் கிராமத்திலோ, வேறு கிராமத்திலோ சொந்தமான நிலம் இருக்கக் கூடாது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.12,000/- வரை உள்ளவர்களுக்கு இலவச நில ஒப்படை வழங்கிடலாம்.
ஒப்படை வழங்கப்படும் நிலத்தையும் சேர்த்து மூன்று ஏக்கர் புஞ்சை அல்லது 1½ ஏக்கர் நஞ்சைக்கு  மிகாமல் இருக்க வேண்டும். இதில் ஒரு நபருக்கு நஞ்சையும், புஞ்சையும் இருந்தால் இதில் ஏதாவது ஒரு வகைபாட்டின் சமன்பாட்டின்படி எவ்வளவு உள்ளது என்று கணக்கிட்டு மேற்குறித்த அளவிற்கு மிகாமல் உள்ளதா என்பதை பரிசீலித்து ஒப்படை வழங்க வேண்டும்.
(அரசு கடித எண்.104214/எஸ்1/89-1 நாள்:20.10.89)
நில ஒப்படை செய்யும் இனங்களில் கீழ் குறிப்பிட்டுள்ளவாறு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
1) போரின் போது கொல்லப்பட்ட முன்னாள் ராணுவத்தினர் / விதவைகள்
2) சாதி கலவரத்தால் பாதிக்கப்பட்ட நிலமற்ற ஏழை
3) அட்டவணை வகுப்பினர் மற்றும் மலை சாதியினர்
4) இராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் ராணவத்தினர் மனைவி
5) பர்மா / இலங்கை அகதிகள்
6) தங்க கட்டுப்பாட்டு திட்டத்தால் பாதிக்கப்பட்ட பொற் கொல்லர்கள்
7) நிலமற்ற ஏழைகள்
8) நன்டைத்தைக்காக விடுவிக்கப்பட்ட கைதிகள்
வருவாய் நிலை ஆணை எண்.15 பிரிவு 5 ல் தெரிவிக்கப்பட்டவாறு நில ஒப்படை பெற விரும்பும் நபர் அளிக்கும் விண்ணப்பத்தினைப் பெற்று முடிவு செய்யும் அதிகாரம் வட்டாட்சியருக்கே உள்ளது.
வீட்டுமனை ஒப்படை செய்திட பின்பற்ற வேண்டிய நடைமுறை விதிகளையே நில ஒப்படைக்கும் பின்பற்ற வேண்டும். வீட்டுமனை ஒப்படை வழங்கிட நில மதிப்பின்படி அதிகாரம் வழங்கப்பட்டுள்ள அலுவலர்களை நில மதிப்பின்படி நில ஒப்படையும் செய்திட அனுமதி அளித்து அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நில ஒப்படை செய்திடும் போது வருவாய் நிலை ஆணை எண்.15(3) மற்றும் 15(12)ன் கீழ் கீழ்கண்ட நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.
1) ஒப்படை பெற்ற நிலத்தை ஒப்படை பெற்ற நாளிலிருந்து  10 ஆண்டுகளுக்கு வேறு நபர்களுக்கு விற்பனை செய்திடவோ,  உரிமை மாற்றம்  செய்திடவோ கூடாது.
2 ஒப்படை பெற்ற  நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் அந்நிலத்தில் விவசாயம் செய்ய வேண்டும். ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணங்களினால் விவசாயம் செய்ய ஆரம்பிக்க முடியவில்லையென்றால் சம்பந்தப்பட்ட வருவாய் அதிகாரிகளிடம் அதிக பட்சம் மேலும் இரண்டு ஆண்டுகள் வரை கால நீட்டிப்பு பெற்றுக்கொள்ளலாம்.
3)  ஒப்படை பெற்ற நிலத்தில் ஒப்படைதாரரோ அல்லது அவரது வாரிசுதாரர்களோ நேரிடையாக விவசாயம் செய்ய வேண்டும்.  குத்தகைக்கு விடக்கூடாது.
மேற்கூறப்பட்ட நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில் வட்டாட்சியர் அல்லது வருவாய்கோட்ட அலுவலரோ ஒப்படையை ரத்து செய்து அந்நிலத்தை மீளப் பெறலாம். இதற்கு கால வரையறை ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை.
மேலும் வருவாய் நிலை ஆணை எண்.15(18) ன் கீழ் ஒப்படை ரத்து செய்வது தொடர்பாக அரசு கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கியுள்ளது.
1)  அரசாணை (நிலை) எண்.2555 வருவாய்த்துறை நாள் :14.5.73க்கு முன் ஒப்படை செய்யப்பட்ட நேர்வுகளில் வருவாய் நிலை ஆணை எண். 15(18)ன் கீழ் ஒப்படை ரத்து செய்ய வேண்டிய நேர்வுகளைசிறப்பு ஆணையம் மற்றும் நில நிர்வாக ஆணையருக்கு உரிய செயற்குறிப்பு மற்றும் ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைக்க வேண்டும். அவர் மனுதாரரின் விளக்கத்தினைப் பெற்று நேர்முக விசாரணையும் நடத்தி பிறகு ஒப்படையினை ரத்து செய்ய வேண்டும்.
2)  14.5.73க்கு பின் ஒப்படை செய்யப்பட்ட நேர்வுகளில் அரசாணை எண்.2555 வருவாய்த்துறை நாள்:14.5.73ல் அளித்துள்ள அதிகாரங்களின்படி சம்பந்தப்பட்ட  வருவாய் அதிகாரிகளே நடவடிக்கை எடுத்திடலாம்.
3)  ஒப்படை செய்யப்பட்ட நிலங்கள் பற்றிய விவரங்களை வருவாய் நிலை ஆணையில் கூறியுள்ளபடி ஆவணங்களில் பதிவு செய்து மூன்று ஆண்டுகளுக்குள் வேளாண்மை செய்யப்பட்டுள்ளதா, தொடர்ந்து வேளாண்மை செய்யப்பட்டு வருகிறதா என்பதையும் உடனுக்குடன் புலத்தணிக்கை செய்ய வேண்டும். நிபந்தனைகள் மீறப்படும் நேர்வுகளில் காலந்தாழ்த்தாது ஒப்படையினை ரத்து செய்வதற்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4)  அதேபோல் ஒப்படை செய்யப்பட்ட நிலங்கள் 10 ஆண்டுகளுக்குள் விற்பனை செய்யப்பட்டாலோ, குத்தகைக்கு விடப்பட்டாலோ அல்லது நிலமாற்றம் செய்யப்பட்டாலோ அல்லது 10 ஆண்டுகளுக்கு பிறகும் இந்நிலங்கள் வேளாண்மை அல்லாத காரியங்களுக்காகப் பயன்படுத்தப் பட்டாலோ கால தாமதமின்றி ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(அரசு கடித எண். 36741/நி.மு.31/97-1 நாள்:15.7.97)