Friday, May 15, 2020

வழக்கறிஞர் இல்லாமல், நீங்களே வழக்கு தாக்கல் செய்வது எப்படி ? பொது நல வழக்கு போடுவது எப்படி ?

பொதுவாக இரண்டு இடங்களில்பொது நல வழக்கு போடலாம். ஒன்று,கீழ் நீதிமன்றம். இது, மாவட்டநீதிமன்றம் ஆகும். இரண்டு,உயர்நீதிமன்றம். இப்போது, கீழ்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு போடுவது எப்படி என்று பார்க்கலாம்.

                                                    பொதுவாக சார்புநீதிமன்றத்திலேயே, பொது நலவழக்கு தாக்கல் செய்யப்படுகிறது.பத்து நபர்கள் இணைந்து வழக்குபோடுவது நல்லது. இதற்கு முதலில்,லீவ் மனு போட வேண்டும். இது,வழக்குடன் இணைந்தது. முதலில்சிவில் வழக்கு போட, பிராதுதயாரிக்க வேண்டும்.

                                                 முதலில்,நீதிமன்றத்தின் பெயர், அதன் கீழ்,ஊர், அதன் கீழ், முதலேற்பு வழக்குஎண் என போட்டு, இடம் விட்டு, எந்தவருடம் தாக்கல் செய்கிறோமோ,அந்த வருடத்தை போட வேண்டும்.அதன் பின்பு, பத்து பேர் வழக்குபோடுவதாக இருந்தால் அவர்கள்பெயரை, ஒன்றன் கீழ் ஒன்றாகஎழுதுங்கள்.
                                      அதற்கு நேராக,வாதிகள் என்று காண்பியுங்கள் .அதன் பின்பு, எதிரிடை என்றுபோட்டு, எதிர் பார்ட்டி நபர்கள்பெயரை ஒன்றன் கீழ் ஒன்றாகஎழுதுங்கள். அதற்கு நேராக,பிரதிவாதிகள் என்றுகாண்பியுங்கள்.
                                       இதன் பெயர், short cause title எனப்படும்.சிவில் வழக்கில்,பிராதை, ஆர்டர் 7, விதி 1 இன்கீழேயே தாக்கல் செய்ய முடியும்.ஆகையால், இப்போது, வாதி தரப்பில்சமர்ப்பிக்கும், பிராது, ஆர்டர் 7, விதி 1என்று, நடு மையத்தில் எழுதுங்கள்.அதன் பின்பு, வாதிகளின் விலாசம்என்று, தலைப்பிட்டு, வாதி வசிக்கும்மாவட்டம், ஊர், தெரு, கதவு இலக்கம்,மற்றும், ஹிந்து என்றால், ஹிந்துஎன்றும், அப்பா பெயர், வயது, அதன்பின்பு, வாதியின் பெயர் எனஎழுதுங்கள்.  பல பேர் இருந்தால்,வரிசையாக ஒன்று, இரண்டு எனஎழுதுங்கள்.
                                             அதன் பின்பு, வாதிக்குsummon, நோட்டீஸ் அனுப்ப மேலேசொன்ன முகவரி போதுமானதுஎன்று எழுதுங்கள். அதன் பின்பு,பிரதிவாதிகளின் விலாசம் என்றுதலைப்பிட்டு, மேலே சொன்னதுபோல, வாதிகளின் முகவரிபோலவே, எழுதி கொள்ளுங்கள்.அதன் கீழ், பிரதிவாதிகளுக்குsummon, நோட்டீஸ் அனுப்ப மேலேசொன்ன முகவரி போதுமானதுஎன்று குறிப்பிடுங்கள். இதன் பெயர்லாங் cause டைட்டில் ஆகும்.
இப்போது,அடுத்த பாராவாக, நீதிமன்ற jurisdiction குறிக்க வேண்டும். நீங்கள்வழக்கு போடும் ஊர், தாவா நீதிமன்றஎல்லைக்குட்பட்டதால்,

                           இந்த வழக்குஇங்கு தாக்கல் செய்யபடுகிறதுஎன்று எழுதுங்கள். ஒவ்வொன்றும்ஒரு பாரா ஆகும். இப்போது மூன்றுபாரா முடிந்திர்க்கும். . வழக்குபோடுபவர், வாதி என்று நினைவில்வைத்து கொள்ளுங்கள். வழக்கின்எதிராளி, பிரதிவாதி ஆவார். யார்மேல் பரிகாரம் கோருகிறீர்களோ,

                              அவர்கள்   அனைவரையும்பிரதிவாதியாக சேர்க்க வேண்டும்.அடுத்த பாரா, வழக்கு விவரங்களைஆரம்பியுங்கள். வாதியானவர், இந்தகிராமத்தில் வசித்து வருகிறார்.இப்படி, வழக்கின் சாராம்சத்தை,சுருக்கமாக, பல பாராக்களாகபிரித்து எழுதுங்கள். உதாரணமாக,பொது பாதை, இவ்வளவு நாளாகபயன்படுத்தப்பட்டு வருகிறது.இப்போது, இன்ன நபர், அதைஆக்கிரமித்துள்ளார். இதனைதெரிவித்து, எதிர் மனுதாருக்கு, இந்ததேதியில் வாதியால் மனு, பதிவுதபாலில் அனுப்ப பட்டது.

                              அதைபெற்று கொண்டு, இன்று வரை,பிரதிவாதிகள் நடவடிக்கை ஏதும்எடுக்காமல், காலம் கடத்திவருகின்றனர். இவ்வாறாக, உங்கள்கரு பொருளை மையபடுத்தி, பிராதுவிவரங்களை சொல்லுங்கள். நீங்கள்அனுப்பிய மனுவின் நகலை தாக்கல்செய்தால், ஒன்றாம் பிரதிவாதிக்குஅனுப்பிய மனு, தபால் ரசீதுஆகியவை வாதி தரப்பு ஒன்றாவதுசான்றாவணம் ஆகும் என்றுகுறிப்பிடுங்கள். சட்ட பாயிண்ட்களையும், குறிப்பிடுங்கள். அதன்பின்பு, அடுத்த பாராவாக, உங்கள்வழக்கின் வியாச்சிய மூலத்தைஎழுதுங்கள்.

                                                  அதாவது, எந்த தேதியில்ஆக்கிரமிப்புதாரர் ஆக்கிரமித்தார்,எப்போது பிரதிவாதிகளுக்கு மனுசெய்யப்பட்டது, இன்று வரைபிரதிவாதிகள் வீண் காலம் கடத்திவருகிறார்கள், மற்றும், வாதிஇருக்கும் ஊர், பிரதிவாதி இருக்கும்ஊர், வழக்கு சொத்து இருக்கும் ஊர்ஆகியவற்றை சொல்லி, இதில்உற்பத்தி என்று காண்பியுங்கள். இதுதனி பாரா. அடுத்து, வாதி, நீதிமன்றகட்டணமாக TAMILNADU COURT FEES AND SUITS VALUATION ACT பிரிவு, இன் படி,இவ்வளவு பணம் செலுத்துகிறார்என்று எழுதுங்கள். அதன் பின்பு, prayer. இதில், நீங்கள் என்ன பரிகாரம்கூறுகிறீர்கள், யார் மீது கூறுகிறீர்கள்என்று சொல்லுங்கள்.

                                                   உதாரணமாக,ஒன்றாம் பிரதிவாதி, பொது இடத்தைஆக்கிரமித்திருந்தால், ஒன்றாம்பிரதிவாதியை, இரண்டு, மூன்றுபிரதிவாதிகள் தாவா பொதுஇடத்தில் இருந்து அகற்ற,உத்தரவிடும் படிக்கும். அதன் பின்பு,வாதிக்கு, பிரதிவாதிகள் வழக்கிடைசெலவை தரும்படிக்கும், மற்றும்,நீதிமன்றம் கருதும் இன்ன பிறபரிகாரங்களை வழங்கும்படிக்கும்,பிரார்திக்கபடுகிறது என்றுமுடியுங்கள்.
                                                          இதில், அரசுஅதிகாரிகளுக்கு எதிராக வழக்குதொடுப்பதால், பிரிவு என்பது, சிவில்procedure code படி, வழக்குதொடுப்பதற்கு தொண்ணூறுநாட்களுக்கு முன் அறிக்கை அனுப்பவேண்டும். அவசரமாக, இந்தவழக்கை தாக்கல் செய்தால், exemptionமனு, பிரிவு, 80(2), civil procedure code படி,தாக்கல் செய்ய வேண்டும். அந்தமனு, இந்த பிராதுடன் தாக்கல்செய்திருப்பதாக, பிராதில்,சொல்லுங்கள். இப்போது, இடதுபக்கம் வழக்கறிஞர் கையொப்பமும்,வலது பக்கம் வாதிகள்கையொப்பமும் போட வேண்டும்.அதன் பின்பு, பிராதை எப்படிமதிப்பிடுகிறீர்கள் என்று, particularsஒப் valuation என்று தலைப்பிட்டு,சொத்து மார்க்கெட் மதிப்புகாட்டுங்கள்.

                                           அதன் பின்பு,TAMILNADU COURT FEES AND SUITS VALUATION ACTபிரிவு, இன் படி, இவ்வளவு பணம்செலுத்துகிறார் என்று எழுதுங்கள்.அதன் பின்பு, சரி பார்த்தல் என்றுதலைப்பிட்டு, மேலே கண்டசங்கதிகள் எல்லாம் என் அறிவிற்குஎட்டிய வரை உண்மை என சொல்லி,மதுரையில் வைத்து, தேதியில் கைஎழுத்திட்டேன் என சொல்லுங்கள்.அதன் பின்பு, சொத்து விவரம்எழுதுங்கள். கிரைய பத்திரத்தில்சொத்து விவரம்கொடுத்திருப்பார்களே, அந்த மாதிரி.அதன் பின்பு, மீண்டும், சரி பார்த்தல்என்று மேலே சொன்னவாறு,எழுதுங்கள்.
                             அதன் பின்பு, மேலேசொன்ன short cause title எழுதி, வாதிதரப்பில் சமர்ப்பிக்கும் ஆவணங்கள்,ஆர்டர் ஏழு, விதி பதினான்கின் படிஎன்று தலைப்பிட்டு, நான்கு columnகட்டமிட்டு கொள்ளுங்கள் முதல்column இல், வரிசை என், அடுத்தcolumn இல் ஆவன தேதி, அடுத்தcolumn இல் ஆவன விவரம், அடுத்தcolumn இல் ஆவன தன்மை, அதுநகலா அல்லது அசலா என்றுகாண்பியுங்கள்.
                                                         இப்போது, உங்கள்கைவசம் உள்ளல ஆவனங்களை,வரிசையாக ஒன்றன் கீழ் ஒன்றாகஎழுதுங்கள். அதன் கீழ், இடது பக்கம்,ஊர், தேதியும், வலது பக்கம்,வழக்கறிஞர் என்று காண்பியுங்கள்.வழக்கறிஞர் இல்லாவிட்டால்,வாதிகள் என்று காண்பித்துகொள்ளுங்கள். அசல் ஆவநங்கள்அனைத்தையும் தாக்கல்செய்யுங்கள். அது முடியாவிட்டால்,சான்றிட்ட நகல் தாக்கல் செய்யலாம்.அதுவும் இல்லாவிட்டால், நகலைதாக்கல் செய்யலாம். ஆனால்,விசாரணை வரும்போது, அசல்அல்லது சான்றிட்ட நகலைத்தான்தாக்கல் செய்ய வேண்டும்.

                                                                   அதை,பின்பு கொடுப்பதாக குறிப்பில்காண்பிக்கலாம். இந்த ஆவணபட்டியல் தனி தாளில் தயார் செய்து,பிராதுடன் இணைக்கலாம்.இப்போது பிராது தயார். இதனுடன்,நீங்கள் வழக்கறிஞர் வைத்தால்,வக்காலத்து வைக்க வேண்டும்.அதன் பின்பு, ஆவணங்களை, ஒருதனி தாளில் டாக்கட் போட்டு, தைத்து,அசல ஆவணங்கள தவிர,மற்றவற்றிற்கு, ஐந்து ரூபாய்நீதிமன்ற வில்லை ஒட்டிகொடுங்கள். பிராதின், முதல்பக்கத்தில், valuation சீட் வைக்கவேண்டும். அதன் பின்பு, நீதிமன்றஸ்டாம்ப் பேப்பர், அதன் கீழ் பிராதுவைத்து தைத்து கொள்ளுங்கள்
.

                          உள்ளே, வக்காலத்து, ஆவணங்கள்ஆகியவற்றை வைக்க வேண்டும்.சில நீதிமன்றத்தில், வாதி,பிரதிவாதி விலாசம் தனி தாளில்அடித்து வைக்க வேண்டி உள்ளது.முன்பே சொன்னது போல, short cause title எழுதி, STATEMENT U/O. VI, RULE 14-Aஎன்று, தலைப்பிட்டு அதன் கீழ், வாதி,பிரதிவாதி விலாசங்கள் எழுதவேண்டும். அதன் பின்பு, supporting affidavit. இதுவும், short cause title எழுதி, SUPPORTING AFFIDAVIT FILED BY THE 1st PLAINTIFF ABOVENAMED U/O VI, R. 15(4) OF C.P.C. என்று தலைப்பிட்டு, அதன் கீழ்,வாதியின் விலாசத்தை தலை கீழாகஎழுதி, பிராதில் வாதியின் விலாசம்எழுதுவீர்களே, அது போல, ஆகியநான், சத்திய பிரமாணத்தின் பேரில்எழுதி வைத்த அப்பிடவிட் என்றுஎழுதி கொள்ளுங்கள். அதன் பின்பு,நான் வழக்கின் வாதி ஆவேன்.

                                 எனக்கு வழக்கு விவரங்கள் பூராவும்நன்கு தெரியும் என்று சொல்லி,அடுத்த பாராவில், சுருக்கமாகபிராதின் விவரத்தை சொல்லுங்கள்.பல வாதிகள் இருந்தால், பிறவாதிகளுக்காக, இந்த அப்பிடவிட்தை தாக்கல் செய்வதாக கூறிகொள்ளுங்கள். இறுதியாக, தனிபாராவாக, ஆகவே, கணம் நீதிபதிஅவர்கள் பிராதுபடி தீர்ப்பளிக்கவேண்டும் என்று முடியுங்கள். அதன்பின்பு, இடது பக்கம், மேலே சொன்னசங்கதிகள் யாவும் உண்மை எனசொல்லி, தேதியில், என் முன்பாக,ஊரில் வைத்து கை எழுத்திட்டார் எனஎழுதுங்கள். வலது பக்கம், வாதியின்கையொப்பம் இடுங்கள். அதன்நடுவில், ஒரு வழக்கறிஞரின்attestation வாங்கி கொள்ளுங்கள்.

                                    இப்போது supporting அப்பிடவிட் ரெடி.பிராதின் ஒவ்வொரு பக்கத்திலும், supportingaffidavitஒவ்வொருபக்கத்திலும், வாதி கையெழுத்து வாங்க வேண்டும். அடுத்து, அரசுஊழியர்கள் மேல் வழக்குதொடுக்கும் முன், உரிய அறிவிப்புஅனுப்பாவிட்டால், அதற்கும் ஒருஅப்பிடவிட், மனு தாக்கல் செய்யவேண்டும். வழக்கம் போல, short causeடைட்டில் எழுதுங்கள். இது தனி இடைநிலை மனு ஆகும். எனவே, லேசாகமாற்றி, நீதிமன்ற பெயர், ஊர் எழுதி,அதன் கீழ், இடைநிலை மனு எண்என எழுதி, இடம் விட்டு, பார் போட்டு, 2014 என வருடத்தை போட்டுகொள்ளுங்கள்.

                                                     இதில், வாதிகள்மனுதாரர்கள் ஆவார்கள்.
எனவே,வாதிகள் பெயரை எழுதி,மனுதார்கள் / வாதிகள் என்றுகாண்பித்து கொள்ளுங்கள். அதேபோல, கீழே, எதிர்மனுதார்கள் /பிரதிவாதிகள் என்று, அரசுஅலுவலர்களை மட்டும் சேர்க்கவேண்டும். உதாரணமாக, நீங்கள்பொது நல வழக்கு போடும்போது,முதல் பார்ட்டி ஆக,ஆக்கிரமிப்புதாரரை காண்பித்துஇருந்தால், இரண்டாம் பார்ட்டி ஆக,அரசு அதிகாரிகளை காண்பித்துஇருப்பீர்கள்.
                                                 இங்கு, அரசுஅலுவலர்கள் மட்டும் வருவதால்,அவர்களை,இம்மனுவில்,எதிர்மனுதார்களாககாண்பிக்கும்போது, வரிசையாககாண்பித்து, அவர்கள் முக்கியவழக்கில் எந்த cadre ஒ, அந்த cadreகாண்பியுங்கள். உதாரணமாக,மாவட்ட ஆட்சியர், முக்கிய வழக்கில்இரண்டாம் பிரதிவாதி என்றால்,இங்கு, முதல் எதிர்மனுதாராககாண்பித்து இருந்தால், முதல்எதிர்மனுதார் / இரண்டாம் பிரதிவாதிஎன்று காண்பியுங்கள். இப்போது,அப்பிடவிட் க்கு வருவோம். முதல்மனுதார் / முதல் பிரதிவாதி தரப்பில்தாக்கல் செய்யும் அப்பிடவிட் என்றுதலைப்பிட்டு கொள்ளுங்கள்.அல்லது, எந்த மனுதார்வேண்டுமானாலும் அப்பிடவிட்தாக்கல் செய்யலாம். வழக்கம் போல, sworn செய்து கொள்ளுங்கள்.

                                அதாவது, விலாசத்தை தலை கீழாகஎழுதி, ஆகிய நான் சமர்ப்பிக்கும்அப்பிடவிட் என்று காண்பியுங்கள்.அடுத்து. முதல் பாரா, supportingஅப்பிடவிட் இல் சொன்னது போலஎழுதி கொள்ளுங்கள். அதன் பின்பு,ஒவ்வொரு சிறு பாராவாக, வழக்குஇந்த அரசு அதிகாரிகள் மீது உடனேதாக்கல் செய்ய வேண்டி உள்ளதால்,அவர்களுக்கு அனுப்ப வேண்டியஅறிவிப்பை, அனுப்ப முடியவில்லைஎன்று பொருத்தமான காரணத்தைகாண்பியுங்கள். இறுதியாக, தனிபாராவில், இம்மனுவைஅனுமதிக்காது போனால், எனக்குபெருத்த இழப்பு ஏற்படும்.

                                     ஆனால்,எதிர்மனுதாருக்கு எவ்விதஆட்சேபனையும் இம்மனு தாக்கல்செய்ய இருக்க போவதில்லை என்றுஎழுதி கொள்ளுங்கள். prayer, ஆகவே,கணம் நீதிபதி அவர்கள் கிருபைசெய்து, எதிர்மனுதார்கள் /பிரதிவாதிகளுக்கு அனுப்பவேண்டிய பிரிவு 80(2) cpcஅறிவிப்பை, dispense செய்யவேணுமாய் பிரார்த்திக்கபடுகிறதுஎன்று முடியுங்கள். இங்கும், supportingஅப்பிடவிட் இல் இருப்பது போலமுடித்து கொள்ளுங்கள்.

                                        அப்பிடவிட்ரெடி.இப்போதுமனு.இத்துடன்இணைத்துள்ள அப்பிடவிட் short cause title அதே போல எழுதிகொள்ளுங்கள். மனுதார் / வாதிதரப்பு மனு பிரிவு 80(2) c.p.c. படி என்றுஎழுதி கொள்ளுங்கள். இத்துடன்இணைத்துள்ள அப்பிடவிட்டில்கண்டுள்ள காரநன்களால், கணம்கோர்ட்டார் அவர்கள் கிருபை செய்து,எதிர்மனுதார்கள் /பிரதிவாதிகளுக்கு அனுப்பவேண்டிய பிரிவு 80(2) cpcஅறிவிப்பை, dispense செய்யவேணுமாய் பிரார்த்திக்கபடுகிறதுஎன்று முடியுங்கள். அதாவது,அப்பிடவிட் prayer உம, மனு prayer உம,ஒன்றாக இருக்க வேண்டும். நீங்கள்இந்த வழக்கை உடனடியாக தாக்கல்செய்ய, அரசு ஊழியர்களுக்கு உரியஅறிவிப்பை கொடுக்க exemptionசெய்ய முறையான காரணங்களைசொல்லாவிட்டால், நீதிமன்றம்உங்கள் வழக்கை உடனடியாககோப்பிற்கு எடுக்காது. நோட்டீஸ்அனுப்பி விட்டு, மூன்று மாதம்கழித்து தாக்கல் செய்யசொல்லுவார்கள்.

                                  அடுத்து, லீவ் மனு.அதாவது, நீங்கள் பொது நல மனுதாக்கல் செய்ய, நீதிமன்றந்தில் லீவ்வாங்க வேண்டும். இது ஒருவிதமான், அனுமதி ஆகும். இதுவும்,இடை நிலை மனுதான். இதற்கும்அப்பிடவிட், மனு வைக்க வேண்டும்.அப்பிடவிட், ஒருமையில் இருக்கவேண்டும். அதாவது, நான்,கேட்கிறேன் என்று வர வேண்டும்.ஆனால், பிராதோ, வாதி, வாதிகோருகிறார் என்று அந்த நடையில்வர வேண்டும். ஒரு பொதுவானநலத்திற்கு எல்லா நபர்களுக்கும்ஒரே நபரே வழக்கு நடத்த, நீதிமன்றம்அனுமதி கொடுக்க வேண்டும்.

                       அதற்குதான், இந்த மனு. வழக்கம்போல, அப்பிடவிட், இதில் நீங்கள் ஏன்ஒரு நபரே இந்த வழக்கை நடத்தவேண்டும் என்று காரணம் கூறவேண்டும. அதே போல மனுவை,ஆர்டர் 1, விதி 8 இன் படி தாக்கல்செய்ய வேண்டும். prayer, ஆகவே,கணம் நீதிபதி அவர்கள்,இவ்வழக்கில் ஒன்றாம் வாதியே, பிறவாதிகளுக்காக, இந்த வழக்கைநடத்த, உத்தரவிட வேண்டியது,அவசியமாயும், நியாயமான்யும்உள்ளது என முடியுங்கள். ஒவ்வொருஇடை நிலை மனுவில் இரண்டுரூபாய் நீதிமன்ற வில்லைஒட்டுங்கள். இதன் கீழே, படி மெமோ.அதாவது, பிரதிவாதிகளுக்குநோட்டீஸ் வைக்க வேண்டும்.
                               பிராதுcopy, நோட்டீஸ், படி மெமோ, போஸ்டல்கவர் மற்றும், அஞ்சல் ஒப்புதல்அட்டை ஆகியவற்றை வைக்கவேண்டும். ஒரு எதிர்பார்ட்டி க்குஉள்ளூர் என்றால் ஐந்து ரூபாய்மற்றும் போஸ்டல் ஸ்டாம்ப்முப்பத்தைந்து ருபாய் ஒட்டுங்கள்.பிரதிவாதி குடி இருப்பது வேறுநீதிமன்றம் மூலம் போகும் என்றால்,கூடுதலாக பத்து ரூபாய், ஒருநபருக்கு ஓட்டுவது நல்லது, நீதிமன்றவில்லை. பிராதுக்கு ஒரு டாக்கட்வாங்கி வைத்து, கூடுதலாக நான்குபச்சை காகிதங்கள் பிராதின்அடியில் வைத்து, பிராது டாக்கட்,அதன் மேல் நான்கு கூடுதல் ஷீட்ஸ்,அதன் மேல் பிராது, அதன் மேல்கோர்ட் பீஸ், அதன் மேல் valuation சீட்வைத்து தைத்து கொள்ளுங்கள்.இப்போது, எல்லாம் தயார். இனி,இந்த வழக்கை இன்றே, நீதிமன்றம்கோப்பிற்கு எடுக்க வேண்டுமானால், emergent மனு மற்றும் அப்பிடவிட்வைக்க வேண்டும். இரண்டு ரூபாய்ஸ்டாம்ப் மனுவில் ஒட்டுங்கள்.

                                         இதைமேலே வைத்து, காலை பத்துமுப்பதுக்கு நீதிபதியிடம்சமர்ப்பியுங்கள். இதில், வழக்குமுடியும்வரை, உருத்து கட்டளைவேண்டும் என்றால், அதற்கு தனிஅப்பிடவிட், மனு. மனு ஆர்டர் 39, விதி1 இன் படி. அப்பிடவிட், வழக்கம்போலதான். அதில் கூடுதலாக,இம்மனுவை அனுமதிக்காதுபோனால், எனக்கு இழப்பு ஏற்படும்.எனக்கு prima facie case and balance of convenience உள்ளது என சேர்த்துகொள்ளுங்கள். prayer, ஆகவே, கணம்நீதிபதி அவர்கள், எதிர்மனுதார் /பிரதிவாதி, வழக்கு முடியும்வரை,தாவா சொத்தைபயன்படுத்தக்கூடாது எனஇடைக்கால உருத்து கட்டளைவழங்கும்படிக்கும்,அதன்தொடர்ச்சியாக, இன்று, ஒரு exparte ad-interim injunction இம்மனுமுடியும்வரை தரும்படிக்கும்,பிரார்த்திக்கபடுகிறது. இதில்ஒவ்வொரு இடை நிலை மனுவுக்கும்,படி மெமோ வைக்க வேண்டும். dispense வித் மனுவுக்கு மட்டும் தேவைஇல்லை. படி, பிராதில் சொன்னபடிதான்.

                                               ஒரு நபருக்கு ஐந்து ரூபாய்.முடிந்தால், ஒரு வழக்கறிஞரிடம் ரெடிசெய்து வாங்கி கொள்ளுங்கள்.அல்லது நீங்கள் தயார் செய்து, ஒருவழக்கறிஞரிடம் காண்பித்துகொள்ளுங்கள். அதன் பின்பு, fileசெய்வது நல்லது. இது ஒருமாதிரியே. இதில் நீங்கள் வழக்கைநன்றாக சட்டப்படி எழுதினால்தான்,வழக்கு வெற்றி பெற வாய்ப்புஉண்டு. ஒரே நாளில் நம்பர் ஆகிவிடும், சரியாக இருந்தால்.இடைக்கால உறுத்து கட்டளையும்,அன்றே கிடைக்க வாய்ப்பு உண்டு.அசல் ஆவணங்களை வைத்தால்,அன்றே கிடைக்க வாய்ப்பு உண்டு.ஒவ்வொரு அப்பிடவிட், மனுஆகியவற்றுக்கும் டாக்கட் போட்டுகொள்ளுங்கள். நல்வாழ்த்துக்கள்

Tuesday, May 12, 2020

12 சோழி ஜோதிட பலன்கள்

12 சோழி ஜோதிட பலன்கள்

12 சோழிகள் தேவை.பஞ்சாட்ச்சர இல்லைனா அட்சாட்சர ஜபம் தெரிஞ்சிருக்கணும். யாரு என்ன கேக்கராங்களோ அதை முழுசா மனதில் வாங்கிண்டு சின்ன பிர்ச்சனைன்னா அட்சாச்சரஜபம் மனதில் சொல்லிண்டு அவர்களின் பிரச்சனை தீரனும் என்று முழுமனசாக பிரார்த்தனை பண்ணிண்டு சோழிகளை குலுக்கி போடனும்.
அப்போ ஒரு சோழி மட்டும் நிமிர்ந்து விழுந்தால் நினைத்தகாரியம் வெற்றிபெரும்,மகிழ்ச்சிபெருகும்,பொருள்சேரும்,பகைகுறையும்தன்னம்பிக்கை ஏற்படும் மொத்தத்தில் நல்லதே நடக்கும்.அதுவே ரெண்டு சோழிகள் நிமிர்ந்து விழுந்தால்னினைத்தகாரியம் நிறைவேரதாமதமாகும்.ஆனால் வெற்றி கிட்டும்.கைவிட்டு போன பொருள் கிடைக்கும்மன நிம்மதி பெருகும்
மூணு சோழி நிமிர்ந்தால் நினைத்தகாரியம் முடியாது,பொருள் விரயம் ஏற்படும், நண்பர்களால் தொல்லை ஏற்படும்,மொத்தத்தில் கெட்டபலன்கள்.
நாலு நிமிர்ந்தால் நினைத்தகாரியம் நடக்கும்,தொழில் வளர்ச்சி ஏற்படும்,மேலிட ஆதரவும் உதவியும் கிடக்கும் நோய் அகலும்.
ஐந்து நிமிர்ந்தால் தேடிய பொருள் கைக்கு வரும் இழந்தது திரும்பவும் கிடைக்க்கும்,வருமானம் பெருகும், வசதிகள் கூடும்,மனதில் தன்னம்பிக்கை பெருகும்.ஆறு நிமிர்ந்தால் பொருள் இழப்பு, வீண் வம்பு,வழக்கு உடல் நல குறைபாடுபண விரயமெண்ணீய காரியம் ஈடேராது. கெடுதலான பலன்கள்.ஏழு நிமிர்ந்தால் தொழில் வளர்ச்சி ஏர்படும், நோய் நீங்கும்,சேமிப்பு பெருகும்,சொத்துக்கள் சேரும் மங்கள காரியங்கள் நடக்கும்.எட்டு நிமிர்ந்தால் தொழில் பாதிப்பு,மனக்கவலை, குடும்பத்தில் பிரிவினை,பொருள் நட்டம் ஏற்படும்.ஒன்பது நிமிர்ந்தால் பொருள் சேரும்,வருமானம் பெருகும்,னோய் நீங்கும்,நல்ல பலன்களே கிடைக்கும்.
பத்து நிமிர்ந்தால் பொருள் விரயம், நோய், கடந்தொல்லைகள், அவமதிப்பு
என்று கெட்டபலன்கள் ஏற்படும்.பதினொன்ரு நிமிர்ந்தால் சேமிப்பு பெருகும், மதிப்பு உயரும், உயர்பதவி கிடைக்கும்,மழலைச்செல்வம் கிடைக்கும், நல்லபலன்களே நலக்கும்.பனிரெண்டும் நிமிர்ந்தால் பெயருக்கு இழிவு, கடன் தொல்லை, உடல் நலக்கேடு, பொருல் திருட்டு என்ரு மோசமான பலன்கள் . இதுதான் இன்று பார்க்க படும் பிரசன்ன சாஸ்திரம். ஆனால் இது உண்மை இல்லையோ .
கேரள, தமிழகத்தில் பிரசன்ன சாஸ்திரம் பற்றிய ஆர்வம் இருந்தாலும் இந்த கலைகளை யாருக்கும் தெரியாது. பண்டைய காலத்தில் அதாவது ராஜ ராஜ சோழன் காலத்தில் முழுமையாக சோழி பிரசன்னாதான் பார்க்க பட்டது ஆனால் இன்று கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வருகிறது. இங்குள்ள யாருக்கும் சோழி பிரசன்ன சாஸ்திரம் பற்றிய முழுமையாக தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.
ஒரு முறை சோழியை கீழே போட்டுவிட்டு திரும்பவும் சோழியை தொடமா முக்காலத்தையும் சொல்ல முடியும். செய்வினை கோளாறு, கிரகங்களின் கோளாறு, வாஸ்து கோளாறு, முன்னோர்கள் சாபம், உடலில் நோய் இருக்க இல்லையோ, நினைத்த காரியமும் ஜெயம் ஆகுமா,யார் இவர் ,இவர் குனம் என்ன, என்ன பிரச்சினை நடக்கிறது, இவர் வீட்டில் நிலவரம் எப்படி இருக்கிறது வீட்டில் பணம் இருக்க இல்லையோ, தேய்வசக்தி இருக்க இல்லையோ தீயசக்திகள் இருக்க இல்லையோ என பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியும்.
ஆயிரம் கேள்விகள் கேட்டாலும் பதில் சொல்ல முடியும்.
இதற்காக எந்திரம் விசேஷமாக மரத்தின் பலகையில் சக்கரத்தை வரைந்து இந்த சக்கரத்தில், 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள்,9 கிரகங்கள், 8 திக்குகள்,7 ஓரைகள்,6 அச்க்ஷாரகள்,5 பூதங்கள், 4 திசைகள், 3 தேவர்கள், 2 சக்திகள், 1 பிர்மாசாஸாம் பதிக்கப்பட்டுள்ளது என்று பார்த்தால் இன்று அவ்வாறு இல்லை ஏனெனில் அவர்களுக்கு தெளிவாக தெரியவில்லை.
12 சோழியை குனம் பார்ப்பதற்கு 12 நாட்கள் தேவைப்படும் .ஒரு சோழி பிரசன்னா வேண்டும் என்றால் முதலில் அந்த சோழி எங்கு இருக்கிறது, எந்த திசை நோக்கி பார்க்கிறது. எந்தெந்த சோழியை இனைந்த இருக்கிறது. என பல்வேறு பதில்கள் இருக்கின்றன இதையெல்லாம் எழுத்தில் எழுதுவதற்கு எனக்கு நேரம் இல்லை.
சோழி பிரசன்னா சாஸ்திரதிற்கு இணையான சாஸ்திரம் எதுவும் இல்லை.
ஒருவருக்கு இறந்த காலம், நிகல் காலம், எதிர்காலம் என முக்காலம் அறியலாம். குறி,ஜோதிடம், அருள் வாக்கு, வெற்றிலை வாக்கு, சொம்பு கனி வாக்கு, நீர் வாக்கு, வாஸ்து வாக்கு, கைரேகை ஜோசியம் என பல்வேறு சாஸ்திரங்கள் கூறுகின்றன நமது எதிர்காலம் பற்றி சொல்லுகிறேன் ஆனால் சோழிக்கு நிகர் இல்லை.
நன்றி குருமுனி பயிற்சி
இந்த கலையை கற்றுக்கொள்ள படிப்பு தேவையில்லை, இறையருள் தேவையில்லை, கால நேரம் தேவையில்லை , பக்தி விரதம் எதுவும் தேவையில்லை மனோசக்தி போதும்.இரண்டு நாட்களில் பிறருக்கு பிரசன்ன பார்க்க முடியும்.
நன்றி குருமுனி பயிற்சி 9600043233