Thursday, January 31, 2019

நீங்கள் ஏதேனும் சூழ்நிலையில் கைது செய்யப்பட்டால் அந்த சமயம் உங்கள் உரிமை என்ன..?
கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகள்.
1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்கவேண்டும்.
2. கைது செய்தவுடன் அந்த இடத்திலே கைது குறிப்பு தயாரிக்க வேண்டும்.
3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்குத் தெரிவிக்க வேண்டும்.
4. கைது செய்யப்பட்ட விபரம் 8 மணி முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.
5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்குத் தெரிவிக்க வேண்டும்
6. காவலில் உள்ள இடத்தில் கைது விபரம், கைது குறித்தத் தகவல் தெரிவிக்கப்பட்டவிபரம் மற்றும் எந்த அதிகாரியின் பொறுப்பில் இருக்கிறார் என்ற விபரங்களை பதிவேட்டில் குறிக்க வேண்டும்…
7. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையைப் பரிசோதித்துச் சோதனைக் குறிப்பு தயார் செய்ய வேண்டும்.
8. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.
9. கைது செய்யப்பட்ட ஆவணங்களைக் குற்றவியல் நடுவருக்கு அனுப்ப வேண்டும்.
10. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும்போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.
11. கைது பற்றிய தகவல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்

Tuesday, January 29, 2019

நிலம் வாங்கும்போது என்னென்ன ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்? – விரிவான அலசல்!


நிலம் வாங்கும்போது (அ) விற்கும் போது என்னென்ன ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்? – விரிவான அலசல்
நிலம் வாங்குவதற்குமுன் அதைப்பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். அதோடு நிலம் வாங்கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக
மக்களுக்கு நிலம் வாங்கும்போதும், விற்கும்போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது தமிழ்நாடு அரசின் எந்தெந்த துறைகளின்கீழ் வருகிறது என்பது போன்ற விவரங்கள் தெரிவதில்லை.
நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.அதற்கு முன் சொத்தின் அடிப்படை விஷயமான புல எண் (Survey Number) என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம்.
புல எண் :
ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் (Taluk ),வட்டங்கள் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக் கும். கிராமங்களின் கீழ் நிலங்கள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும். அதற்குப் புல எண் (survey Number) என்று பெயர்.
நிலம் தொடர்பான விவரங்கள் இருதுறைகளில் பரா மரிக்கப்படுகின்றன.
1. பதிவுத்துறை
2. வருவாய்த்துறை
1.பதிவுத்துறை :
நாம் சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தை (Sale Deed) சார்பதிவாளர் (Sub- Registration Office) அலுவலகத்தில் தான் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் நீங்கள் வாங்கவிருக்கும் நிலம், விற்பவரின் அனுபவத்தில் இருக்கும் போது அந்த நிலதின் உரிமை யாளர் யார்? எத்தனை பேர் மற்றும் அந்த நிலம் அட மானத்தில் உள்ளதா? அல்லது அந்த நிலத்தின் மீது வழக்கு எதாவது நடந்து வுருகிறதா?  என்பன போன்ற கேள்விகளுக்கு பத்திர பதிவு அலுவலகத்தில் வில்ல ங்க சான்று (EC-Encumbrance Certificate) கேட்டு மனு செய்து அதில் வில்லங்கங்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்
2. வருவாய்த்துறை :
இந்த துறையில்தான் நிலத்திற்கான விவரங்கள் கீழ்க் கண்ட பதிவேட்டில் இருக்கும்.
பட்டா (Patta)
சிட்டா (Chitta)
அடங்கல் (Adangal)
அ’ பதிவேடு (‘A’ Register)
நிலத்திற்கான வரைபட எல்லை (FMB)

பட்டா (Patta) :
நிலத்தின் உரிமை, நமக்குத்தான் இருக்கிறது என்பதற் கான ஆதாரம் பட்டாவாகும். பட்டாவை வைத்துதான் ஒரு நிலத்தின் உரிமை, யாருக்கு என்பதை முடிவு செய்யப்படுகின்றது. பின்வரும் விவரங்கள் பட்டாவில் இருக்கும் :-
1. மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர் மற்றும் கிராமத்தின் பெயர்
2. பட்டா எண்
3. உரிமையாளர் பெயர்
4. புல எண்ணும் உட்பிரிவும் (Survey Number and Sub division)
5. நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா
6. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை

சிட்டா (Chitta) :
ஒரு தனி நபருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு. இதில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட் டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய் பயன் பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.
அடங்கல் (Adangal) :
ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணு க்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்பன போன்ற விவர ங்கள் இதில் இருக்கும்.
அ’ பதிவேடு (‘A’ Register) :
இப்பதிவேட்டில் . . .
1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),
3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு,
4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,
5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை,போன்ற விவரங்க ள் இருக்கும்.

நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) :
நிலத்திற்கான வரைபடம். இது இடம் எவ்வாறு பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிற து .

கிரையப் பத்திரம் (Sale Deed) :
சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்த க் கிரயப் பத்திரத்தைச் சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub Registration office) பதிவு செய்ய வேண்டும். கிரை யப் பத்திரத்தில் கீழ்க்கண்ட முக்கியமான விவரங்கள் இருக்கும்.
1. எழுதிக் கொடுப்பவரின் பெயர், முகவரி
2. எழுதி வாங்குபவரின் பெயர், முகவரி
3. எவ்வளவு அளவு
4. எவ்வளவு தொகைக்கு விற்கப்படுகிறது
5. சொத்து விவரம்
சொத்து விவரத்தில் நாம் வாங்கும் நிலத்தின் அளவு, அது எந்தப் புல எண்ணில் அமைந்திருக்கிறது, பட்டா எண், அது எந்தக் கிராமத்தில் இருக்கிறது மற்றும் வட் டம், மாவட்டம் பற்றிய விவரங்கள் இருக்கும். நிலம் வீட்டு மனையாக இருந்தால் அதனுடைய அங்கீகாரம் பெற்ற விவரங்கள் மற்றும் பிளாட் எண் முதலியவை இருக்கும்.
கிரையப் பத்திர முதல் தாளின் பின் பக்கம் சார்பதிவா ளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட முழு விவர ங்கள் இருக்கும்.
1. பதிவு எண் மற்றும் வருடம்
2.சொத்து எழுதிக்கொடுப்பவரின்புகைப்படம், கைரே கை, கையெழுத்து, முகவரி
3. சொத்து எழுதி வாங்குபவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
4.புகைப்படங்களில் சார் பதிவாளரின் கையொப்பம்
5. பதிவு செய்யப்பட்ட நாள், விவரம், பதிவு கட்டணம் செலுத்திய விவரம், சார்பதிவாளர் அலுவலகத்தின், விவரம் ஆகியவை
6. இரண்டு சாட்சிகளின் கையொப்பம் மற்றும் முகவரி
7. மொத்தம் எத்தனை பக்கங்கள்
8. மொத்தம் எத்தனை தாள்கள்
9. தமிழ்நாடு அரசின் ஸ்டிக்கர்.

ஆவணங்கள்:
01.07.06 முதல்தான் கிரயப் பத்திரத்தில் சொத்து விற்ப வர் மற்றும் வாங்குபவர்களின் புகைப்படங்கள் ஒட்டு ம்முறை அரசால்நடைமுறைப்படுத்தப்பட்டது. சொத்து வாங்குபவர் புகைப்படம் இரண்டும் சொத்து விற்பவ ரின் புகைப்படம் ஒன்று ஒட்டப்பட்டு இருக்கும். இதற்கு முன் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் புகைப்படங் கள் இருக்காது. 18.05.09 முதல் இந்த முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு சொத்து வாங்குபவரின் புகைப் படம் இரண்டிற்குப் பதிலாக ஒன்று ஒட்டினால்போதும் என்ற முறை நடைமுறைக்கு வந்தது.
இது தவிர ஒவ்வொரு தாளின் இரு பக்கமும் இந்தக் கிரயப் பத்திரம் மொத்தம் எத்தனை பக்கங்கள் (Sheet) கொண்டது மற்றும் அந்தப் பக்கத்தின் எண், ஆவண எண், வருடம் போன்ற விவரங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தினரால்  குறிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொ ரு தாளின் பின்புறமும் இந்தக்கிரயப்பத்திரம் எத்தனை தாள்களைக் கொண்டது. அந்த தாளின் நம்பர், ஆவண எண், வருடம் முதலியவை குறிக்கப்பட்டு சார்பதிவா ளர் கையொப்பம் இருக்கும்.
நாம் பதிவு விவரங்கள் முத்திரைத் தாள்களில் டைப் செய்யும் போது அதன் முன்பக்கம் மட்டும் தான் டைப் செய்ய வேண்டும். ஒவ்வொரு பக்கத்திற்கும் 1ல் இருந் து ஆரம்பித்து வரிசையாக இலக்கம் இடப்படும்.. அத னால் தாள்களின் எண்ணிக்கையும் பக்கமும் சமமாக இருக்கும். எடுத்துக்காட்டாக 16 முத்திரைத் தாள்களில் டைப் செய்தால் 16 பக்கங்கள் இருக்கும். ஆனால் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்யும்போது பதிவி ன் விவரங்கள் அனைத்தும் முதல் தாளின் பின்புறம் குறிக் கப்பட்டிருக்கும்.
சார்பதிவாளர் அலுவலகத்தில் இதையும் ஒரு பக்கமா க கணக்கில் எடுத்துக் கொண்டு இலக்கம் கொடுப்பரா ர்கள். அதனால் மொத்தம் 16 தாள்கள்தான் இருக்கும். ஆனால் பக்கங்கள் மட்டும் 17 ஆகிவிடும்.
பதிவு செய்யும் முறை:
நாம் வாங்கும் இடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட் ட புல எண்களில் அமைந்திருக்கலாம். ஒவ்வொரு புல எண்ணிற்கும் அது அமைந்திருக்கும் இடத்தை பொறு த்து அரசாங்கம் மதிப்பீடு செய்து ஒரு விலை நிர்ண யம் செய்யும். அதற்கு பெயர் Guide line value .
நாம் பத்திரம் பதிவு செய்யும் போது இந்த பெயர் Guide line valueக்கு 8% முத்திரை தாள்களாக வாங்கி அதில் கிரயப் பத்திரத்தின் விவரங்கள் டைப் செய்து சார்பதி வாளர்அலுவலகத்தில் தாக்கல்செய்யவேண்டும்.முழு மதிப்பிற்கும் (8%) முத்திரைத்தாள்கள் வாங்க முடியா த நிலையில், ஏதாவது ஒரு மதிப்பிற்கு முத்திரைத் தாள் வாங்கிவிட்டு மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தலாம்.
இதற்கு 41 என்ற படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் வாங்க வேண்டிய முத்திரைத் தாள்களின் மதி ப்பு, நாம் வாங்கிய முத்திரைத் தாளின் மதிப்பு,, மீதி செலுத்த வேண்டிய தொகை முதலிய விவரங்களை பூர்த்தி செய்து கிரயப் பத்திரத்துடன் இணைத்து சார்ப திவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மீதி செலுத்த வேண்டிய தொகை ரூபாய் ஆயிரம் வரை இருந்தால் பணமாக செலுத்தி விடலாம். அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் காசோலையாக (Demand Draft) செலுத்த வேண்டும். காசோலை யார் பெயரில் எடுக்க வேண்டும் என்ற விவரம் அந்தந்த சார்பதிவாளர் அலு வலகத் தகவல் பலகையில் குறிக்கப்பட்டிருக்கும்.
பதிவுக் கட்டணமாக Guide line valueவில் இருந்து (1%) மற்றும் கணினி கட்டணம் ரூபாய் 100ம் பதிவு செய்ய ப்படும் போது சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இதுவும் ரூபாய் ஆயிரம் வரையில் பணமா கவும் அதற்கு மேல் காசோலையாகவும் செலுத்த வேண்டும்.
முத்திரைத் தாள்களில் கிரயப் பத்திர விவரங்கள் டைப்செய்து, ஒவ்வொரு பக்கத்திலும் கீழ்பகுதியில் ஒருபுறம் சொத்து வாங்குபவரும் மறுபுறம் சொத்து விற்பவரும் கையொழுத்து இட வேண்டும். பின்பு சார் பதிவாளரிடம் இந்தக் கிரயப் பத்திரத்தைப் பதிவு செய் வதற்காக தாக்கல் செய்ய வேண்டும்.
சார்பதிவாளர், சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரி ன் புகைப்படம், அடையாள அட்டை முதலியவைக ளையும், மற்ற எல்லா விவரங்களையும் சரி பார்த்து விட்டு கிரயப் பத்திரத்திற்குப் பதிவு இலக்கம் கொடுப் பார். நாம் செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்திய பின் நிலம் விற்பவர் மற்றும் வாங்குபவ ரின் புகைப்படங்கள் முதல் முத்திரைத் தாளின் பின் புறம் ஒட்டப்பட்டு அவர்களுடைய கையொப்பம், முக வரி, கைரேகை முதலியவை வாங்கப்படும். புகைப்பட ங்களின் மேல் சார்பதிவாளர் கையொப்பம் இடுவார். சாட்சிகள் கையொப்பமிடுவர் இத்துடன் பதிவு நிறைவு பெறும்.

பதிவுக் கட்டணம் செலுத்திய இரசீதில், சார்பதிவாளர் மற்றும் சொத்து வாங்குபவர் கையொப்பம் இட வேண் டும். சொத்து வாங்குபவர் பதிவு செய்யப்பட்ட பத்திரத் தைக் குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்த இரசீ தைக் காட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்று பெற்றுக் கொள்ளலாம். அவரைத் தவிர வேறு யாராவ து சென்று வாங்க வேண்டியதிருந்தால், இரசீதில் அந்த நபரும் கையொப்பமிட வேண்டும்.
பத்திரப்பதிவின் போது Guide line value-விற்கு 8% முத் திரைதாள் வாங்க வேண்டும். அரசாங்கத்தால் நிர்ண யிக்கப்பட்ட Guide line value அதிகமாக இருக்கிறது என எண்ணும் பட்சத்தில் நாமே சொத்திற்கு ஒரு மதிப் பு நிர்ணயம் செய்து அந்த மதிப்பிற்கு 8% முத்திரைத் தாள் வாங்க வேண்டும். அதை சார்பதிவாளர் பதிவு செ ய்து விட்டு pending document என முத்திரை இட்டு விடு வார்.மாவட்டஆட்சியர் அலுவலகத்தில்(Collectoroffice ) இதற்கென்று ஒரு பிரிவு இருக்கிறது. அங்கிருந்து அரசாங்க அலுவலர் ஒருவர் வந்து இடத்தை பார்வை யிட்டு, அதைச் சுற்றி உள்ள சர்வே எண்களின் மதிப்பை வைத்து Guide line value சரியானதா என்பதை முடிவு செய்வார். அல்லது அவரே ஒரு மதிப்பை நிர்ணயம் செய்வார்.

Guide line value சரியாக இருக்கிறது என்று அவர் முடி வு செய்யும் பட்சத்தில் Guide line value-விற்கும் நாம் நிர்ணயித்த மதிப்பிற்கும் உள்ள வித்தியாசத் தொகை யில் 8% பணமாக கட்ட வேண்டும் அல்லது அவர் நிர் ணயம் செய்த மதிப்பிற்கும், நாம் நிர்ணயம் செய்த மதி ப்பிப்ற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பண மாக கட்ட வேண்டும். அப்பொழுது தான் நாம் பதிவு செய்த document நம்மிடம் ஒப்படைக்கப்படும். இந்த முறை 47A பிரிவு என்பதாகும். ஒரு குறிப்பிட்ட காலத் திற்குள் மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத் தில் செலுத்தி பத்திரத்தைப் பெற வேண்டும். இல்லை என்றால் அது அந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். நாம் அங்கு சென்று அந்த வித்தியாசத் தொகையை செலுத்தி பெற்று கொள்ளலாம்.
சில முக்கிய குறிப்புகள்:-
1.முதலில் நீங்கள் வாங்கவேண்டிய சொத்தில் ஏதாவ து வில்லங்கம் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள் ளவேண்டும். இதற்கு, நீங்கள் வாங்கஇருக்கும் இடத்தி ற்கான பத்திரத்தின் ஒரு நகலை எடுத்து சம்மந்தப்பட் ட சர் பதிவாளர் அலுவலகத்தில் அதற்கான கட்டணத் தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
2. மிக முக்கியமான விஷயம்: முன்பணம் (அட்வான் ஸ்) மிகக்குறைந்த அதாவது 5000 முதல் 10000 வரை மட்டுமே முன்பணமாக கொடுக்க வேண்டும். ஒரு வே லை அதிகமாக முன்பணம் செலுத்த வேண்டி வந்தால் செக் அல்லது டிடி கொடுப்பத்டு சால சிறந்தது. உடன் விற்பனை உடன்படிக்கையையும் பெற்றுகொள்வது முக்கியம்.
3 .சொத்தை பதிவு செய்யும் பொழுது மட்டுமே முழு தொகையையும் கொடுக்க வேண்டும். அதுவும் செக் அல்லது டிடி கொடுப்பது உசிதம்.
4 .பதிவு செய்யும் முதல் நாள் கூட வில்லங்கம் எடுத்து பார்ப்பது நல்லது.
5 .சொத்தை வாங்கி பிறகு பட்டா மாற்றிக் கொள்வது மிகவும் அவசியமாகிறது. பட்டா உங்கள் பெயரில் இரு ந்தால் வேறு யாரும் சொந்தம் கொண்டாடவோ வேறு பிரச்சனைகளோ வருவதற்கு வாப்பு கிடையாது
நன்றி :raviatg.blogspot.com








பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி?


ஒருவர் தமது சொத்தை விற்றாலோ அல்லது வேறு ஒருவரிடமிருந்து வாங்கினாலோ அல்லது வேறு ஒரு பெயருக்கு மாற்றினாலோ அதை ஆவணப்படுத்த வேண்டியது அவசியம். இரண்டு தனி நபர்களுக்கிடையே நடக்கும் விற்பனை நடவடிக்கையை பத்திரப்பதிவு செய்வது முதல் நடவடிக்கை எனில், அதனை அரசு அங்கீகரித்து அளிப்பதே பட்டா பெயர் மாற்றம்.

பட்டா உள்ள நிலம், கட்டிடம், காலி மனை, விவசாய நிலங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்கள் வாங்கப்படும்போது, அவற்றை விலை கொடுத்தோ, சொத்து வாரிசு உரிமைப்படியோ, பாகப்பிரிவினை பத்திரப்படியோ, உயில் ஆவணத்தின்படியோ வாங்குபவர் பட்டாவின் பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? யாரை அணுகுவது? விரிவான விவரங்கள் இங்கே.



பட்டாவில் என்னென்ன விவரங்கள் இருக்கும்?

பட்டா என்பது ஒரு நிலத்தின் உரிமை யாரிடம் இருக்கிறது என்பதைக் காட்டுவதாகும். இதில் உரிமையாளர் பெயர், பட்டா எண், ஊரின் பெயர், மாவட்டத்தின் பெயர், புல எண்(survey number), உட்பிரிவு (sub division), நிலத்தின் பரப்பு, தீர்வை, நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா போன்ற விவரங்களை உள்ளடக்கியிருக்கும்.


எங்கே விண்ணப்பிப்பது?

சொத்தின் எல்லைக்குட்பட்ட வட்டாட்சியரிடமோ அல்லது கிராம நிர்வாக அலுவலரிடமோ விண்ணப்பிக்கலாம். நேரில் விண்ணப்பத்தைக் கொடுத்தால் ஒப்புகைச் சீட்டு வாங்கி வைத்துக் கொள்வது அவசியம். அப்படி ஒப்புகைச் சீட்டு தராத பட்சத்தில் விண்ணப்பத்தை அஞ்சல் ஒப்புகையுடன் பதிவுத் தபாலில் அனுப்பிவிட வேண்டும்.


கட்டணம் எவ்வளவு?

பட்டா மாற்றத்திற்கு அதன் உட்பிரிவினைப் பொறுத்து 80 ரூபாயிலிருந்து 240 ரூபாய் வரைக்கும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.


எப்படி விண்ணப்பிப்பது?

பத்திரப்பதிவு செய்து, 15 நாட்களில் பட்டா மாறுதலுக்காக சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு, ‘நான் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒளிநகல் பத்திரத்தில் உள்ள நிலத்தைக் கிரயம் பெற்றேன். நான் கிரயம் பெற்ற நிலத்தை என் பெயரில் பட்டா மாற்றம் செய்திட/ உட்பிரிவு செய்து தனிப்பட்டா அளித்திட வேண்டுகிறேன்’ என்று விண்ணப்பத்தைப் பதிவஞ்சலில் ஒப்புதல் அட்டையுடன் அனுப்பிவிட வேண்டும். இத்துடன் பத்திர ஆவணங்களின் நகலை இணைக்க வேண்டும்.


எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும்?

சாதாரண பட்டா மாற்றத்திற்கு 15 நாட்களிலும், உட்பிரிவு செய்யவேண்டிய பட்டா மாற்றத்திற்கு 30 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும்.


பட்டாவின் அவசியம்

  • ஒருவரிடமிருந்து மற்றொருவர் நிலமோ, கட்டிடமோ விலை கொடுத்து வாங்கும்போது சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்யப்படும். பத்திரப்பதிவுக்குப் பின் வாங்கியவர், தமது பெயருக்கு பட்டா மாறுதல் செய்துகொள்ள வேண்டும்.

  • ஏனெனில் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் நில ஆவணங்கள் இருப்பதால் பத்திரப்பதிவு நகலை வைத்து உரிய கட்டணம் செலுத்தி, தன் பெயருக்கு மாற்றித் தர விண்ணப்பிக்க வேண்டும்.

  • வட்டாட்சியரிடமிருந்து சம்பந்தப்பட்ட நில அளவையாளருக்கு விண்ணப்பம் அனுப்பப்படும். விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட அவர், நிலத்தை நேரில் சென்று அளந்து, ஆவணங்களில் தேவையான மாறுதலைச் செய்து, பட்டா மாற்றம் செய்து வழங்குவார்.

  • வங்கிகளில் விவசாயக் கடன் பெற, நகைக் கடன் பெற, பத்திரப்பதிவு செய்ய, அரசின் நலத்திட்டங்களைப் பெற, இயற்கைச் சீற்றங்களால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்போது வெள்ள அல்லது வறட்சி நிவாரணம் பெற... இப்படிப் பல அரசு சார்ந்த செயல்பாடுகளுக்கு பட்டா அவசியமாகிறது.

ஆவணங்களின் நகல்களைப் பெற...

பட்டா மாற்றத்திற்குப்பின் அடங்கல், சிட்டா, அ பதிவேடு, நிலவரைபடம் ஆகிய ஆவணங்களின் நகல்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் எப்படி விண்ணப்பித்துப் பெறுவது என்பதை விளக்குகிறார் தகவல் உரிமைச் சட்ட பயிற்றுநர் எம்.சிவராஜ்.


‘எனக்கு சாதாரண பட்டா மாற்றம் ---- தாலுகா ---- கிராம ------ புல எண்ணில் அளிக்கப்பட்டது. இது குறித்துப் பதிவுகள் செய்யப்பட்ட சிட்டா, அடங்கல் நகல் அளிக்க வேண்டுகிறேன்.’


‘எனக்கு உட்பிரிவு தனிப்பட்டா ---- தாலுகா ---- கிராம ------ புல எண்ணில் அளிக்கப்பட்டது. இது குறித்துப் பதிவுகள் செய்யப்பட்ட சிட்டா, அடங்கல், அ பதிவேடு, நிலவரைபடம் ஆகியவற்றின் ஒளிநகலை அளிக்க வேண்டுகிறேன்.’


குறிப்பிட்ட 15/30 நாட்களுக்குள் பட்டா மாற்ற ஆணைகள் வராவிடில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.


மேலும் விளக்கம் பெற : 94434 89976


பட்டா பெயர் மாற்றம் செய்தபின் கவனிக்க வேண்டியவை:

  • ஒரு சொத்தை வாங்கியபின் பின்னால் ஏதும் பிரச்சினைகள் வராமலிருக்க, வருவாய்த் துறையின் கீழிருக்கும் பதிவுத்துறையில் கீழ்க்கண்ட பதிவேட்டின் நகல்களைப் பெற்று வைத்திருப்பது அவசியம். இதனை வைத்து ஒரு சொத்து ஒருவரின் பெயரிலிருந்தால் அது அரசுப் பதிவேடுகளில் எங்கெங்கு பதிவாகியிருக்கும் எனத் தெரிந்துகொள்ளலாம்.

  • சிட்டா - குறிப்பிட்ட கிராமத்தில் ஒரு நபருக்கு எவ்வளவு நிலமிருக்கிறதென அரசு வைத்திருக்கும் பதிவேடு இது. இதிலும் பட்டாவில் உள்ள விவரங்களைப் போல உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், என்ன வகையான நிலம்? அது பயன்பாட்டில் இருக்கிறதா? தீர்வை கட்டப்பட்டுள்ளதா போன்றவை அடங்கியிருக்கும்.

  • அடங்கல் - ஒரு கிராமத்தின் மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதில் பட்டா எண், நிலத்தின் பயன்பாடு, சர்வே எண்ணுக்குரிய நிலத்தின் உரிமையாளர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும்.

  • அ பதிவேடு - பட்டா எண், பதிவு பெற்ற உரிமையாளர் பெயர், பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், சர்க்கார்(ச) அல்லது இனாம்(இ), ரயத்துவாரி(ர), நன்செய்(ந), புன்செய்(பு), மானாவாரி(மா), தீர்வு ஏற்படாத தரிசு(தீ.ஏ.த.), புறம்போக்கு ஆகியவை அடங்கியிருக்கும்.

  • நிலத்தின் வரைபடம் - சர்வே எண், நிலத்தின் வடிவம், நீள அகலம் ஆகியவற்றைக் காட்டும்.

  • பட்டா மாற்றம் மட்டுமே முழுமையானதல்ல. சாதாரண பட்டா மாற்றமெனில் அடங்கல், சிட்டா ஆகியவற்றிலும், உட்பிரிவு செய்யப்பட்ட பட்டாமாற்றமெனில் அடங்கல், சிட்டா, அ பதிவேடு, நிலவரைபடம் ஆகியவற்றிலும் மாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். எனவே பட்டா மாற்றம் முடிந்ததும் மேற்சொன்ன பதிவேடுகளின் நகல்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதுவே பாதுகாப்பானது.

  • விரைவுப் பட்டா மாற்றம் உத்தரவிலும் கூட அந்தக் கிராம ஆவணங்களில் இதன் மாற்றம் குறித்து பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்வது அவசியம்.
நன்றி kovaitamila. blogspot. com
        நன்றி: புதியதலைறை




கிராம நத்தம் – விரிவான சட்ட‌ விளக்க‍ம்

கிராம நத்தம் – விரிவான சட்ட‌ விளக்க‍ம்
நிலம் தொடர்பான தொன்றுதொட்டே வரும் வழக்கு மொழிகள் இன்றைய இளம் தலைமுறையினருக்கு தெரிவதில்லை. அவர்களுக்காகத்தான் இந்த
பதிவு. கிராம நத்தம் என்றால் என்ன என்பதைபறி விரிவான சட்ட‍ விளக்கத்துடன் காண்போம்.
அதென்ன கிராம நத்தம்?
நத்தம் என்றால் குடியிருப்பு பகுதி எனப் பெயர். கிராம நத்தம் என்றால் கிராமத்தில் இருக்கும் குடியிருப்பு பகுதி. அவ்வளவு தான்.
நத்தம் புறம்போக்கு என்றால் என்ன?
குடியிருப்பு பகுதியில் இருக்கும் புறம்போக்கு என்று பெயர்.
சாதாரண புறம்போக்குக்கும், நத்தம் புறம்போக்குக்கும் என்ன வித்தியாசம்?
சாதாரண புறம்போக்கு என்றால் அரசுக்கு என்றாவது பயன்படும் நிலமாகவும் ஆனால் மக்களுக்கு குடியிருப்புக்கு பயன்படாத நிலமாகவும் இருக்கும். அதாவது ஏரி, ஆறு, கிணற்று பகுதிகள் போன்றவையை சொல்லலாம்.
கிராம நத்தத்திற்கும், நத்தம் புறம்போக்குக்கும் என்ன வித்தியாசம்?
கிராம நத்தமோ அல்லது நத்தம் புறம்போக்கோ எல்லாம் ஒன்றுதான். மக்கள் குடியிருக்க ஏதுவான இடம் என்றுதான் அர்த்தம். இந்த மாதிரியான நத்தம் நிலங்க ளில் பட்டா நீங்கள் வாங்கி விட்டால், அந்த நிலம் உங்களுக்கே சொந்தமாகிறது. பட்டா இல்லை என்றால் நாளைக்கு அந்த நிலம் அரசுக்கு தேவையானால் தயவு தாட்சண்யம் பார்க்காமல் உங்களை காலி செய்யும் அதிகாரம் அரசுக்கு உண்டு.
நத்தம் புறம்போக்கில் வீடு கட்டி குடியிருக்கலாமா?
நத்தம் புறம்போக்கு பகுதியில் தான் லட்சகணக்கான நபர்கள் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்த நத்தம் விவரங்களை 2015 ம் ஆண்டு அரசு கணினி மயமாக்க முடிவு செய்தது. அதற்காக ரூ. 70,00,000/- ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் நத்தம் நிலம் மொத்தமாக எவ்வளவு இடங்கள் உள்ளன என்ற விவரங்கள் அரசு கட்டுப்பா ட்டுக்குள் வந்தாலும் இன்னும் கணினி மயமாக்கவில்லை. அதனை அரசு கணக்கெ டுத்தால் தான் நத்தம் நிலத்தில் வீடுகள் எவ்வளவு உள்ளது என்கிற புள்ளி விவரங்கள் வந்து சேரும்.
30.10.1987 முதல் 1.1.1988 வரை நத்தம் நில அளவைப் பணி நடைபெற்றது. (அரசாணை நிலை எண் – 1177,வணிகவரித்துறை மற்றும் அறநிலையத்துறை)
அரசாணை எண் – 1971, வருவாய்த்துறை (எஸ். எஸ். 2), நாள் – 14.10.1988 – ல் அங்கீ கரிக்கப்பட்டுள்ள நத்தம் நிலவரித் திட்ட அறிக்கையின்படி (அதாவது யூ. டி. ஆர் காலம் 1987 ல் முடிவடைகிறது. நத்தம் காலம் 1988 ல் தொடங்குகிறது) கிராம புறங்களில் நத்தம் மனைக்கட்டு பகுதிகளுக்கும், வேளாண்மை நிலங்கள் அல்லாத பிற காரியங்களுக்கு பயன்படுத்தப்படுபவைகளுக்கும், மனைவரி விதிக்க வழி வகை செய்யப்பட்டது. 1988 வரை நத்தம் பகுதிகளுக்கு யாருடைய அனுபவத்தில் எவ்வளவு விஸ்தீரணம் உள்ளது என்பதற்கோ நத்தத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிவதற்கோ எவ்வித கணக்குகளும் பராமரிக்கப்படாமல் இருந்தது.
நத்தம் நிலவரித் திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு ஒவ்வொருவருடைய அனுபவ த்திலும் உள்ள நத்தம் பகுதி தனித்தனியாக உட்பிரிவுகள் செய்யப்பட்டு நத்தத்தில் உள்ள பல்வேறு புறம்போக்குகளையும் அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் கண்டறிந்து அதன்மீது தக்க மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
மேலும் பொது உபயோகத்தில் உள்ள புறம்போக்கு பகுதிகளில் உள்ள பயன்தரும் மரங்களும் கணக்கிடப்பட்டு, அவை மரவரி விதிப்பின்றி இருக்குமானால், இத்த கைய இனங்களை பட்டியலிட்டு வருவாய் வட்டாட்சியருக்கு மேல் நடவடிக்கை க்காக அனுப்பப்பட்டன.
இத்திட்டத்தின் படி தோராய பட்டா ஒவ்வொரு நபருக்கும் தயாரிக்கப்பட்டு அவர்க ளிடம் சார்பு செய்யப்பட்டு, அதன் மீது ஆட்சேபனைகள் ஏதும் வரப்பெற்றால், விசார ணை நடத்தி தக்க ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது. இத்திட்டத்தினால் நத்தத்தில் ஒவ்வொருவருடைய அனுபவத்தில் உள்ள இடமும் வரையறை செய்யப்பட்டது. பொது உபயோகத்தில் உள்ள இடங்களும் தனித்தனியே உட்பிரிவுகள் செய்யப்பட்ட ன.
இதனால் நத்தத்தில் ஏற்படும் எல்லை பிரச்சினைகளை தீர்த்து வைக்கவும், பொது உபயோகத்தில் உள்ள செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து மேல் நடவ டிக்கை எடுக்கவும் வசதியாக இருந்தது. நத்தத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் அவர வர்களின் அனுபவத்தில் உள்ள விஸ்தீரணங்கள் நிர்ணயிக்கப்படுவதால் அதன் அடிப்படையில் வீட்டுவரி, மற்றும் மனைவரி வசூல் செய்ய மிகவும் உப யோகமாக இருந்தது. (அரசாணை நிலை எண் – 454,வருவாய்த்துறை, நாள் – 13.5.1996 ன்படி, மனைவரி தள்ளுபடி செய்யப்பட்டது).
— வ‌ழக்கறிஞர் பிறவி பெருமாள்


Thursday, January 24, 2019

  • கிராமப் பஞ்சாயத்துக்கான பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவாளராக கிராம நிர்வாக அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பிறப்பு / இறப்புக்கானப் பதிவுகள் – மேற்கொள்ள கிராம நிர்வாக அலுவலர் அதற்கான சட்டம் மற்றும் விதிகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
பிறப்பு
ஒரு குழந்தையின் முதல் உரிமை, பிறப்பு பதிவுதான்
பிறப்பு / இறப்புக்கான சட்டம்
  • 1969-ஆம் ஆண்டின் பிறப்புகள் மற்றும் இறப்புகள் சட்டம் (மத்தியச் சட்டம் 18/1969)
  • தமிழ்நாட்டில் 2000-ஆம் ஆண்டில் பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது,
  • தமிழ்நாட்டில் திருத்தியமைக்கப்பட்ட புதிய செயல்திட்டம் (Revamped system). தமிழ்நாட்டில் 01-01-2000 முதல் செயல்பட்டு வருகிறது.
2000-ஆம் ஆண்டில் பிறப்பு / இறப்பு பற்றி புதிய திட்டத்தின் நோக்கங்கள்
  • பதிவேடுகள், அறிக்கை செய்யும் படிவங்கள் மற்றும் மாதாந்திர அறிக்கை படிவங்களை ஒன்று படுத்துதல்.
  • பிறப்பு, இறப்பு பதிவேடுகளை எளிதில் பராமரித்தல்.
  • அடிப்படை பதிவாளர்களின் (Primary Registrars) வேலைப்பளுவினைக் குறைத்தல்.
  • மாதாந்திர அறிக்கைகளை எளிதில் தொகுப்பதற்கும் மற்றும் அனுப்புவதற்கும் 2000-ஆம் ஆண்டு பிறப்பு, இறப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.
பிறப்பு இறப்பு பதிவு செய்ய அதிகாரம் பெற்ற துறைகள்
  • 1969-ஆம் ஆண்டில் பிறப்பு, இறப்பு பதிவுச்சட்டம் செயல்படுத்தும் துறை, பொதுச் சுகாதாரத்துறையாக இருந்தது.
  • பொதுச் சுகாதாரம் மற்றும் காப்பு மருந்து இயக்குநர், தமிழகத்தின் பிறப்பு, இறப்பு, பதி முதன்மைப் பதிவாளர் ஆவார்.
  • தற்போது பிறப்பு, இறப்பு பதியும் துறைகள்
  • கிராமப் பஞ்சாயத்து – வருவாய்த் துறை (கிராம நிர்வாக அலுவலர்).
  • சிறப்பு ஊராட்சி – சிறப்பு ஊராட்சித் துறை.
  • நகராட்சி / மாநகராட்சி – நகராட்சி நிர்வாகத் துறை / மாநகராட்சி ஆணையர்
பிறப்பு / இறப்பு பதிவு செய்யும் இதர துறைகள் : (Supporting Role)
  • மருத்துவப் பணிகள்
  • மருத்துவக் கல்வி
  • பதிவுத் துறை
  • காவல்துறை
  • நீதித்துறை
பிறப்பு / இறப்பு பதிவுத்திட்டத்தின் சிறப்பு இயல்புகள்
  • பிறப்பு – இறப்பு நிகழ்வு நடந்த இடத்தில் பிறப்பு / இறப்பு நிகழ்வினைப் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • பிறப்பு / இறப்பு, இயக்க ஊர்திகளில் நடந்தால் ஊர்தி செல்லும் வழியில் தங்குவதற்கு முதன்முதலாக நிற்கும் இடமே – பிறப்பு / இறப்பு நிகழ்ந்த இடமாகக் கருத வேண்டும்.
  • நாட்காட்டி ஆண்டுப்படி பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
  • ஊராட்சி, சிறப்பு ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதி / மண்டலம் வாரியாக தனித்தனி பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.
பிறப்பு – இறப்பு பதிவுகளுக்கான தகவல் தரும் படிவம் இரு பிரிவுகளைக் கொண்டது.
i) சட்டப் பகுதி
ii) புள்ளி விவரப்பகுதி
  • பிறப்பு – இறப்பு தகவல் தரும் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் விடுபடாமல், தகவலாளர் படிவத்தில் நிரப்பி பதிவாளரிடம் கையொப்பமிட்டுத் தரவேண்டும்.
  • பதிவாளர் அதனைப் பெற்று, பதிவின் வரிசை எண், பதிவு செய்த நாள், பதிவாளரின் கையொப்பமிட்டபின் வரிசைக்கிரமமாக பூர்த்தி செய்து தரப்பட்ட படிவத்தை பராமரித்து, ஒவ்வொரு மாதம் முடிந்தவுடன் அடுத்த மாதம் முதல் 5-தேதிக்குள் வட்டாட்சியருக்கு தவறாது அனுப்ப வேண்டும்.
  • சட்டப்பகுதி – பதிவேடாக பராமரித்தல் வேண்டும்.
பிறப்பு / இறப்பு என்பதன் விளக்கம் : (சட்டம்-பிரிவு-2)-இன் படி
  • பிறப்பு என்பது உயிருள்ள பிறப்பு அல்லது உயிரற்ற பிறப்பு என்று பொருள்படும்.
  • இறப்பு என்பது உயிருள்ள பிறப்பு நிகழப்பெற்ற பின்பு எப்போதாயினும் உயிரியக்கத்தின் அறிகுறி அனைத்தும் நிலையாக மறைதல் இறப்பு ஆகும்.
  • கர்ப்ப முதிர் கரு இறப்பு : (Foetal death) என்பது கர்ப்பத்தின் அளவை பொருட்படுத்தாமல் தாயிடமிருந்து கருவில் உண்டானதை முழுமையாக வெளியேற்றுவதற்கு அல்லது பிரித்தெடுப்பதற்கு முன்பாக உயிரியக்கத்தின் அறிகுறி அனைத்தும் இல்லாதிருத்தல் என்று பொருள்படும்.
  • உயிருள்ள பிறப்பு (Live Birth) என்பது கர்ப்பத்தின் கால அளவைப் பொருட்படுத்தாமல் தாயிடமிருந்து கருவில் உண்டானதை முழுமையாக வெளியேற்றுவது அல்லது பிரித்தெடுப்பது என்று பொருள்படும். ஆனால் அது அவ்வாறு வெளியேற்றப்பட்ட அல்லது பிரித்தெடுக்கப்பட்ட பின்பு மூச்சு விடுதல் அல்லது உயிரியக்கத்தின் பிற அறிகுறி எதனையும் காட்டுதல் வேண்டும். மற்றும் அத்தகைய பிறப்பில் உண்டான ஒவ்வொன்றும் உயிருடன் பிறந்ததாக கருதப்படும்.
  • உயிரற்ற பிறப்பு (Still Birth) என்பது கருவில் உண்டாவது. குறைந்தபட்சமாக வகுத்துரைக்கப்பட்டுள்ள கர்ப்ப கால அளவை நிறைவேற்றியுள்ளவிடத்து கர்ப்ப முதிர்கரு இறப்பு ‘உயிரற்ற இறப்பு’ என்று பொருள்படும்.
  • ‘கர்ப்பகால அளவு’ (விதி-3) (பிரிவு-2) இன் படி 28 வாரங்கள் எனக் குறிக்கப்பட்டுள்ளது.
பிறப்பு / இறப்பு பதிவாளர்கள் :
(பிறப்பு - இறப்பு சட்டப்பிரிவு 3, 6, 7-இன் படி) கூறப்பட்டவை.
  • இந்திய அளவில் இந்திய தலைமைப் பதிவாளர் – இவர் மத்திய அரசால் நியமனம் செய்யப்படுகிறார்.
  • மாநில அளவில் மாநில முதன்மைப் பதிவாளர் – மாநில அரசு இவரை நியமனம் செய்கிறது
தமிழகத்தின் முதன்மைப் பதிவாளர்
  • தமிழகத்தின் பொதுச் சுகாதாரம் மற்றும் காப்பு மருந்து இயக்குநர் அவர்களே முதன்மைப் பதிவாளர் ஆவார். இணை இயக்குநர் (State Bureau of Health Intelligence) பிறப்புகள் மற்றும் இறப்புகள் துணை முதன்மைப் பதிவாளராக உள்ளார்.
மாவட்ட அளவில்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட வருவாய் அலுவலரே மாவட்டப் பதிவாளராகவும்,
சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கூடுதல் மாவட்டப் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நகராட்சி மற்றும் மாநகராட்சி அளவில்:
  1. பிறப்பு – இறப்பு பதிவாளர்கள் நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் ஆவர்.
ஊராட்சி அளவில்
  1. கிராம ஊராட்சி அளவில் பிறப்பு - இறப்பினை கிராம நிர்வாக அலுவலர் மேற்கொள்கின்றார்.
  • பிறப்பு – இறப்பு பற்றி அறிக்கைகளை மேற்கொள்ளும் படிவங்கள்
  • படிவம் – 1: பிறப்பு அறிக்கை செய்யும் படிவம் (Birth Reporting Forms)
  • படிவம் – 2: இறப்பு அறிக்கை செய்யும் படிவங்கள் (Death Reporting Form)
  • படிவம் – 3: உயிரற்ற பிறப்பு அறிக்கை செய்யும் படிவங்கள் (Still Birth Reporting Forms)
  • படிவம் – 4: மருத்துவமனையில் நேரிட்ட இறப்புக்கான காரணத்திற்குரிய மருத்துவச்சான்று. (Medical Certification of cause of death for institutions)
  • படிவம் – 4 A: வீட்டில் நேரிட்ட இறப்புக்கான காரத்திற்குரிய மருத்துவச் சான்று. (Medical Certification of cause of death for domiciliary events)
  • படிவம் – 5: பிறப்புச் சான்று (Birth Certificate)
  • படிவம் – 6: இறப்புச் சான்று (Death Certificate)
  • படிவம் – 7: பிறப்புப் பதிவேடு (Birth Register)
  • படிவம் – 8: இறப்புப் பதிவேடு (Death Register)
  • படிவம் – 9: உயிரற்ற இறப்புப் பதிவேடு (Still Birth Register)
  • படிவம் – 10: கிடைக்கப்பெறாமை சான்று (Non availability Certificate)
  • படிவம் – 11: பிறப்புகள் பற்றிய மாதாந்திர அறிக்கை சுருக்கம் (Summary of monthly report on birth)
  • படிவம் – 12: இறப்புகள் பற்றிய மாதாந்திர அறிக்கை சுருக்கம் (Summary of monthly report on birth)
  • படிவம் – 13: உயிரற்றப் பிறப்புகள் பற்றிய மாதாந்திர அறிக்கை சுருக்கம் (Summary of monthly report on still birth)
  • படிவம் – 14A: அறிக்கைகள் பெறும் கட்டுப்பாடுப் பதிவெடு (Control Register for receipts)
  • படிவம் – 14B: ஆண்டு புள்ளி விவர அறிக்கை (Statistical Report for the year)

பிறப்பு / இறப்பு பதிவாளர்கள் அலகு: (Units)

  • கிராம் நிர்வாக அலுவலர் கிராம பஞ்சாயத்திற்கான பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் அலுவலகத்தின் முன்பாக “பிறப்புகள் மற்றும் இறப்புகள் - பதிவாளர்” என்ற வாசகங்களடங்கிய வழிகாட்டிப் பலகையை வைக்க வேண்டும்.
  • இந்தப் பலகையில் கிராம நிர்வாக அலுவலரின் பெயர் மற்றும் அலுவலக நேரம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
  • பிறப்பு / இறப்பு சான்றுகளுக்கு தகவலாளர் தரவேண்டிய விபரங்கள் அடங்கிய படிவங்கள் (விதி-5)
  • படிவம்-1 பிறப்புப் பதிவிற்கான படிவம்.
  • படிவம்-2 இறப்புப் பதிவிற்கான படிவம்.
  • படிவம்-3 உயிரற்றப் பிறப்பிற்கான படிவம்.
  • தகவலாளர்கள் (பிரிவு-8)
  • பிறப்பு அல்லது இறப்பு பதிவுக்காக பதிவாளரிடம் வாய்மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ தகவல் தருவதற்குரிய தகவலாளர்கள் பற்றிய முறைகள் பிரிவு 8-ல் குறிப்பிடப்பட்டுள்ளன.
பிறப்பின் நிகழ்வுகளை அறிவிப்பவர் யார்?
  • வீடு ஒன்றில் நிகழும் பிறப்பு அல்லது இறப்பைப் பொறுத்தவரை, வீட்டின் தலைவர், கூட்டுக் குடும்பமாக இருந்தால் கூட்டுக்குடும்பத்தின் தலைவர், நிகழ்வு நடைபெற்ற போது அவர் வீட்டில் இல்லாமலிருந்தால், வீட்டுத் தலைவரின் நெருங்கிய உறவினர் அத்தகைய ஆள் எவரும் இல்லாதிருந்தால் வீட்டில் இருக்கும் மூத்த வயது வந்த ஆள்.
  • மருத்துவமனை, நலவாழ்வு மையம், மகப்பேறு அல்லது மருத்துவ இல்லத்தைப் பொருத்தவரை மருத்துவ அலுவலர் அல்லது அவரால் அதிகாரம் அளிக்கப்பட்ட நபர்.
  • சிறைச்சாலைகளில் ஏற்படும் நிகழ்வுகளை பொருத்தவரை பொறுப்புடைய சிறை அலுவலர்.
  • வழித்தங்கல் மனை, சத்திரம், விடுதி, அறச்சாலை உணவு விடுதி, தங்கும் விடுதி, மருந்தகம், பொதுமக்கள் புழங்கும் இடம் இவற்றில் ஏற்படும் பிறப்பு அல்லது இறப்பு நிகழ்வைப் பொருத்தவரை அதன் தலைமை நிர்வாகியே பொறுப்புடையவர் ஆவார்.
  • பொதுவிடம் ஒன்றில் கைவிடப்பட்டு காணப்படும் பிறந்த குழந்தை அல்லது இறந்த குழந்தை உடலை பொருத்தவரை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் அல்லது அவரையொத்த பிற அலுவலர் அல்லது காவல்நிலைய அதிகாரி பொறுப்புடையவர் ஆவார்.
  • பிறந்த குழந்தை அல்லது இறந்த உடலை எவர் காண்கின்றனரோ அல்லது உடல் எவருடைய பொறுப்பில் வைக்கப்படலாகுமோ. அவர் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
  • தோட்டம் (Plantation) ஒன்றில் பிறப்பு / இறப்பு ஏற்படின், தோட்டத்தின் கண்காணிப்பாளர் (மேலாளர், கண்காணிப்பாளர் அல்லது பிற பெயர்களில் அழைக்கப்பட்டாலும்) அவரே பதிவுக்கான தகவலை அளிக்க வேண்டும்.

பிறப்பு – இறப்பு பதிவுகள் (விதி-5 பிரிவு-8)

பிறப்பு-இறப்பு தகவல் படிவங்கள் இரு கூறுகளாக பிரிக்கப்படுகின்றன.
1. சட்டப்பகுதி (Legal part)
2. புள்ளி விவரப் பகுதி (Statistical part)
  • பதிவாளர் என்ற பொறுப்பிலுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் பதிவுக்காக பிறப்பு/இறப்பு படிவங்களில் அனைத்து விவரங்களையும் விடுபடாமல் பெறவேண்டும். தகவல் அளிப்பவரின் கையொப்பம் அல்லது கல்வி பயிலாதவராக இருப்பின் “இடது கை பெருவிரல்” பதிவு படிவத்தில் பதியப்பட வேண்டும்.
  • பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள், சென்று கொண்டிருக்கின்ற வாகனங்களில் பிறப்பு ஏற்பட்டால், (எவ்வகை வாகனமாக இருந்தாலும், நிலத்திலோ, காற்றிலோ, தண்ணீரிலோ சென்றால்) அவ்வாகனம் நிற்கும் முதல் இடமே பிறப்பு (அ) இறப்பு நிகழ்ந்த இடமெனக் கருத வேண்டும்(விதி-6).
  • பிறப்பு அல்லது இறப்பு தகவல்களை பதிவாளரிடம் நிகழ்வு நடந்த நாளிருந்து 21-நாள்களுக்குள் தர வேண்டும் (பிரிவு-8, விதி-5(3)).

பிறப்பு-இறப்பு காலதாமத பதிவுகள் : (விதி-9, பிரிவு-13)

  • பிறப்பு – இறப்பு நிகழ்வு நடந்த 21 - நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.
  • இவை தமிழ்நாடு பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவு விதி 5-இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • 21 நாள்களுக்கு அதிகமானால் அதாவது நிகழ்வு நடந்த நாளிருந்து 30 நாள்களுக்குள் பதிவு செய்தால் பதிவாளர் விதி 9-இல் கண்டுள்ளவாறு காலதாமதக் கட்டணம் ரூ.2-னைச் செலுத்திய பின் பதிவு செய்யலாம்.
  • பிறப்பு அல்லது இறப்பு நடந்து 30 நாள்களுக்கு மேல் ஆனால் ஓராண்டு முடிவதற்கு முன்பாக தகவல் தரும் பட்சத்தில் ஊராட்சித் தலைவரின் எழுத்து மூலமான அனுமதி பெற்றும் காலதாமதக் கட்டணம் ரூ.5 செலுத்தப்பட்ட பின்பு பதிவாளர் பதிவு செய்ய வேண்டும் என விதி (9(2)) கூறுகிறது.
  • ஓராண்டுக்குள் பதிய அனுமதி மறுக்கப்பட்டால் ஊராட்சித் தலைவரின் ஆணையை எதிர்த்து, வருவாய் கோட்டாட்சியருக்கு 30 நாள்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம் என விதி (9(4)) கூறுகிறது.
  • கோட்டாட்சியர் பதியாத பட்சத்தில் கோட்டாட்சியரின் ஆணைக்கு எதிராக மாவட்ட ஆட்சியருக்கு மேல் முறையீடு செய்யலாம்.
நீதிமன்ற ஆணையின் பேரில் பதிவு செய்தல்: விதி 9(3), பிரிவு-13-இன் படி:
  • பிறப்பு அல்லது இறப்பு ஏற்பட்ட ஓராண்டுக்குள் பதிவு செய்யப்படவில்லை எனில், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆணை பெற்ற பின்பே பதிவை மேற்கொள்ள முடியும்.
  • சென்னையைப் பொறுத்தவரை மாநகரக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றவியல் அசல் மனு (COP) அல்லது குற்றவியல் பல்வகை மனு (CMP) ஒன்றினை பிறப்பு அல்லது இறப்பு குறித்த ஆதாரச் சான்றுடன் தாக்கல் செய்து நீதிமன்ற ஆணை பெற்ற பிறகே பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
  • நீதிபதி பிறப்பு அல்லது இறப்பு குறித்த விசாரணை செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டபின், அவ்வாணையின்படி பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் அவ்வாணையுடன் ரூ. 10-ஐ செலுத்தி பிறப்பு இறப்பு அலுவலரிடம் பதிவு செய்தல் வேண்டும்.
தகவல் தருபவர் – பதிவேட்டில் – கையொப்பம் இடுதல்: (பிரிவு 11 மற்றும் 12-இன் படி)
  • பிறப்பு / இறப்பு பதிவாளருக்கு தகவல் அளிப்பவரின் பெயர், குடியிருக்கும் இடம் மற்றும் முகவரி ஆகியவற்றைப் பதிவேட்டில் பதிவு செய்து தகவல் அளிப்பவரின் கையொப்பம் அல்லது படிக்காதவராயின் இடது கை பெருவிரல் பதிவினையும் பதிவேட்டில் பெற வேண்டும்.
  • தகவல் தருவோருக்கு கட்டணமின்றி பிறப்பு அல்லது இறப்பு பதிவேட்டிலிருந்து பதியப்பட்ட விவரங்களடங்கிய பதிவேட்டின் நகல் ஒன்றை பதிவாளர் கையொப்பம் இட்டுக் கொடுக்க வேண்டும்.
  • தமிழ்நாட்டில் பிறப்பு / இறப்பு குறித்த பதிவுகள் விதி 8 மற்றும் 9-இன் படி பதிவேட்டு குறிப்பு படிவம் 5-இல் தர வேண்டும்.
  • இறப்பு குறித்த பதிவுகளை நகல் படிவம் – 6லும் வழங்க வேண்டும்.
  • பிறப்பு / இறப்புச் சான்று தகவல் அளித்த 30 நாள்களுக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் காலக்கெடு முடிந்த 15-நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

பிறந்த குழந்தையின் பெயரை பதிவு செய்தல் (விதி-10) (பிரிவு-14):

  • குழந்தை பிறந்த விவரங்களைப் பதிவு செய்யும் போது குழந்தையின் பெயர் குறிப்பிடப்படாமல் பதிவு செய்யப்பட்டிருந்தால், 12-மாதங்களுக்குள் குழந்தையின் பெயரை கிராம நிர்வாக அலுவலரிடம் பதிவு செய்ய வேண்டும்.
  • 12-மாதங்கள் கழித்து ஆனால் 15-ஆண்டுகளுக்குள் பெயர் பற்றிய விவரம் தெரிவிக்கும்பட்சத்தில் ரூபாய் 5 காலதாமதக் கட்டணம் செலுத்தப்பட்ட பின் பெயர் பதிவாளர் பதிவு செய்யலாம்.
  • இவ்வாறு பதிவு செய்யும்போது கிராம நிர்வாக அலுவலர் விதி 10-இன் கீழ் உள்ள வரம்புக்கு உட்பட்டு செயல்படுத்தி பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
  • பிறப்பு-இறப்பு கையேடு பதிவாளர் (VAO)கையில் இருந்தால் காலதாமதக் கட்டணம் ரூபாய் 5 செலுத்தி உடனடியாக உரிய காலத்தில் பதிவு செய்ய வேண்டும்.
  • பதிவேடு பதிவாளர் (VAO) கையில் இல்லாத போது வாய்மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ, கிராமப் பஞ்சாயத்துத் தலைவருக்கு அனுப்பி பெறப்பட்ட தகவல்களை காலதாமதக் கட்டணம் ரூ.5 செலுத்தி பதிவுகளை மேற்கொள்ளலாம்.
பெயர் பதிவின் வரம்பு காலம்
  • 01-01-2000-த்திற்குப் பிறகு நிகழ்ந்த பிறப்புக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 15 ஆண்டுகள்.
  • 01-01-2000-த்திற்கு முன்பு நிகழ்ந்த பிறப்புக்கு திருத்தியமைக்கப்பட்ட விதிகள் செயலாக்கத்திற்கு வந்த நாளிலிருந்து (01-01-2000) 15-ஆண்டுகள்.
  • நிர்ணயிக்கப்பட்ட 15 ஆண்டுகள் காலக்கெடு முடிவுற்ற பின்னர் குழந்தையின் பெயரை பதிவு செய்ய விதிகளில் இடமில்லை.
  • ஓராண்டுக்குப் பின் மற்றும் 15-ஆண்டுகளுக்குள் பெயர் பதிவை மேற்கொண்டால் தாமதக் கட்டணம் ரூ.5 வசூலித்து, பதிவு மேற்கொண்டு அதிகாரம் பெற்ற அலுவலருக்கு தகவல் அனுப்ப வேண்டும்.
  • ஒரு முறை பெயர் பதிவு மேற்கொள்ளப்பட்ட பின்பு பெயர் பதிவுகளை முழுவதும் எந்தச் சூழ்நிலையிலும் மாற்றலாகாது. ஆனால் எழுத்துப் பிழைகளை சரி செய்ய (Spelling Corrections) அதிகாரம் பெற்ற அலுவலர் அனுமதிக்கலாம்.
  • சாதிப்பெயர், குடும்ப பெயர் அல்லது வேறு அடையாளங்களைப் (Any other identification) பெயருடன் சேர்க்கவோ, நீக்கவோ முடியும் ஆனால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பெயரில் எந்த மாற்றமும் செய்யாமல் பெற்றோர் அல்லது காப்பாளரின் உறுதிமொழி அடிப்படையில் செய்யலாம்.
  • பெயர் பதிவு மேற்கொள்ளக் கோருபவரின் உண்மைத்தன்மையை தொடக்கத்திலும் அல்லது பதிவு செய்யும்போதும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். பதிவாளர் மேற்கண்டபடி நிகழ்வின் உண்மைத் தன்மையை தன் மனநிறைவுப்படி உறுதி செய்து கொள்வது மிகவும் முக்கியம்.
  • தமிழ்நாடு பிறப்புகள் மற்றும் இறப்புகள் (பிரிவு-15, விதி-11)-இன் படி வரையறுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பதிவாளர் பின்பற்றி, அதிகாரம் பெற்ற அலுவலரின் முன் அனுமதி பெற்று சரிசெய்தல் மற்றும் நீக்கம் செய்யலாம்.
  • அதிகாரம் பெற்ற அலுவலரின் முன் அனுமதி பெற்று, மூலப்பதிவில் மாற்றம் ஏதும் செய்யாமல், பக்க ஓரத்தில் தகுந்த பதிவைச் சரிசெய்யலாம் அல்லது நீக்கம் செய்யலாம். பக்க ஓரப்பகுதியில் கையொப்பமிட்டு சரிசெய்த (அ) நீக்கம் செய்த தேதியை அதில் சேர்க்க வேண்டும்.

பிறப்பு - இறப்பு - பதிவேட்டில் திருத்தம் செய்யும் முன்பு கவனிக்க வேண்டியவை (Before Correction):

  • நம்பத்தகுந்த இரு நபரிடம் சான்றுகளைக் கண்டிப்பாக பெற வேண்டும்.
  • பிரிவு – 21-இன் படி திருத்தங்களை உறுதி செய்வதற்குத் தேவையான வேறு ஏதாவது சான்று ஆவணங்கள் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தலாம்.
  • திருத்தங்கள் செய்வதற்காக வரும் நபர் உண்மையில் நிகழ்வுக்கு சம்பந்தப்பட்டவரா என்பதனையும், தரப்படும் விவரங்களை முற்றிலுமாக விசாரிக்க வேண்டும்.
  • திருத்த நேர்வின் விவரங்களை உறுதிப்படுத்திக் கொண்டு அதிகாரம் பெற்ற அலுவலரின் எழுத்து மூலமான அனுமதி விதிகள் 11(1), 11(2) மற்றும் 11(3)-இன் படி பெற வேண்டும்.
பிறப்பு - இறப்பு திருத்தங்கள் மேற்கொள்ளும் போது கவனிக்க வேண்டியவைகள் (Effecting Corrections)
  • பதியப்பட்ட பதிவினை அழித்துவிடுவதோ அல்லது அழித்துவிட்டு திருத்தங்கள் மேற்கொள்வதோ கூடாது, ஆனால் முதலாம் பதிவுகளை மையினால் சுழித்துவிட்டு (Rounded by ink) சரியான விவரங்களை பதிவின் ஓரமாக எழுத வேண்டும்.
  • செய்யப்பட்ட திருத்தங்களுக்குப் பதிவாளர் தன் கையொப்பம் மற்றும் திருத்தம் செய்யப்பட்ட தேதியிட்ட மேற்குறிப்பு செய்ய வேண்டும்.
  • ஒவ்வொரு பதிவேட்டின் முதல் பக்கத்தில் ஆண்டு எண் விவரங்கள் மற்றும் செய்யப்பட்ட திருத்தங்களின் விவரங்களை வரிசைப்படி காண்பிக்கப்பட வேண்டும் அவ்வப்போது செயலாட்சி அதிகாரம் (Executive authority) கொண்ட அலுவலரின் கையொப்பத்தை பெற வேண்டும்.
  • சான்றுகள் வழங்கப்பட்ட பின் திருத்தங்கள் ஏதேனும் மேற்கொண்டால் அதனின் விவரம் பதிவேட்டிலும் அதே போன்று சான்றிலும் திருத்தங்களுக்குப் பின் பதியப்பட வேண்டும்.
  • திருத்தங்கள் தேவையான ஆவணச் சான்றுகள் முழுமையான விசாரணையின் அடிப்படையில் செயல்படுத்தல் வேண்டும். மேற்கொண்டு அதே இனத்தில் திருத்தங்களை அனுமதித்தல் ஆகாது. ஏனெனில் மேற்கொண்ட விசாரணை மற்றும் பரிசீலிக்கப்பட்ட சான்றாவணங்களின் செல்லத்தக்க (Validity) நிலைக்கு எதிராகக் கொண்டுசெல்ல இயலும்.
அயல்நாட்டிலுள்ள இந்திய குடிமக்களின் பிறப்புகள் மற்றும் இறப்புகளின் பதிவு (பிரிவு 20)
  • இந்திய தலைமைப் பதிவாளர் விதிக்கு உட்பட்டு அயல்நாட்டிலுள்ள இந்திய தூதரகங்களில் இந்தியாவுக்கு வெளியே வாழ்கின்ற இந்தியக் குடிமக்களைப் பதிவு செய்ய வேண்டும்.
  • குடிமைச்சட்டம் 1955-இன் படி பிறப்பு – இறப்புகளை பதிவு செய்ய வேண்டும் என பிரிவு 20 கூறுகிறது.
  • வெளிநாட்டில் “பிறந்து” பிறப்பு பதியப்படாமல் இந்தியாவில் நிலையாக தங்கியிருக்கும் நோக்குடன் வந்து இந்தியாவில் தங்கிய நாளிருந்து 60 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.
  • இந்தியாவில் வந்து தங்கிய 60 நாள்களுக்கு மேல் பிறப்பினை பதிவு செய்யும் போது பிரிவு-13-இன் ஷரத்தின் படி பின்பற்ற வேண்டும்.

விபத்தினால் நிகழும் இறப்பின் பதிவுகள்

இறப்புகள் இரு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  1. தற்கொலை, கொலை, விபத்துகள் அல்லது வன்முறை போன்றவற்றால் மருத்துவமனைகளில் சேர்த்த பின்பு ஏற்படும் இறப்புகள்.
  2. பொது இடங்களில், சிறைச்சாலைகளில் ஏற்படும் இறப்புகள். தற்கொலை, கொலை, விபத்துகள் அல்லது வன்முறை போன்றவை மூலம் ஏற்படும் இறப்பை மருத்துவமனை பொறுப்பாளர்கள் பிரிவு 8(1) (b)-இன் படி பதிவாளருக்கு பதிவு செய்ய தகவல் அளிக்க வேண்டும்.
விசாரணை, அல்லது பிரேத விசாரணை மேற்கொள்ளும் நிலையில் விசாரணை அதிகாரி அல்லது காவல்துறை பதிவாளருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
பொது இடங்களில், சிறைச்சாலையில் இருக்கும் போது ஏற்படும் இறப்புகள் பற்றி விசாரணை செய்யும் அலுவலர் குறிப்பிட்ட காலத்துக்குள் பதிவாளருக்கு இறப்பு அறிக்கை அனுப்ப வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர் பிறப்பு / இறப்பு காலமுறை அறிக்கை அனுப்புதல் : (விதி-14-இன் படி).

  • கிராம நிர்வாக அலுவலர் ஒவ்வொரு மாதமும் பதிவுகளை முடித்த பின் புள்ளி விவரங்களடங்கிய புள்ளி விவரத் தகவல்களை(Statistical parts of the reporting terms) மாதாந்திர சுருக்க அறிக்கைகள் (படிவம் 11, 12 மற்றும் 13) ஆகியவற்றை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பிறப்பு, இறப்பு முடிந்த அடுத்த மாதம் 5-ஆம் தேதிக்குள் அனுப்புதல் வேண்டும்.
  • வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பிறப்பு / இறப்பு அறிக்கை சுருக்கத்தை பிரதிமாதம் 10-ஆம் தேதிக்குள் மாவட்ட தலைமையிடத்தில் உள்ள சுகாதாரப் பணி இணை இயக்குநருக்கு காலமுறை அறிக்கைகளை (Report) அனுப்ப வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர் பிறப்பு – இறப்பு பதிவேடுகளைப் பராமரித்தல் (விதி-17):
கிராம நிர்வாக அலுவலர் பாதுகாக்கும் இப்பதிவேடுகளை (மூன்று) பிரிவாக பாதுகாப்பர்.
i) பிறப்புப் பதிவேடுகள்
ii) இறப்புப் பதிவேடுகள்
iii) உயிரற்ற பிறப்புப் பதிவேடுகள்
இம்மூன்றும் நிரந்தரப் பதிவேடுகள் ஆகும்.
  • இவைகளை அழித்துவிடக் கூடாது. ஏனெனில் விதி 13-இன் படி நீதிமன்றங்கள் மற்றும் அதிகாரம் அளிக்கப்பட்ட இதர அலுவலரின் அறிவுறுத்தல் மூலம் காலதாமதம் பிறப்பு / இறப்பு பதிவுகளை மேற்கொள்வதற்காக பதிவேடுகளை பாதுகாக்க வேண்டும்.
  • வட்டாட்சியர் அளவில் 2 - ஆண்டுகள் பாதுகாத்து காப்புறு சார்பதிவாளரிடம் (Sub Registrar) ஒப்படைக்க வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலரின் முக்கியக் கடமைகள்:
  • தனது அலுவலகத்தில் பிறப்பு – இறப்பு பதிவாளர் என்ற ”விளம்பரப் பலகை” வைத்து நேரம் மற்றும் VAOவின் பெயர் குறிப்பிடப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
  • பிறப்பு / இறப்பு பதிவுகள் மேற்கொள்ள போதிய படிவம் வைத்திருக்க வேண்டும்.
  • பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும்.
  • பிறப்பு / இறப்பு உரிய காலத்துக்குள் பதிவை செய்ய வலியுறுத்த வேண்டும்.
  • பிறப்பு / இறப்பை நாட்காட்டி மாதத்தில் முன், பின்னாக மாறாமல் நாள் வரிசைப்படி பதிவை மேற்கொள்ள வேண்டும்.
  • பிறப்பு / இறப்பை பதிய தவறியவர்களுக்கு குறிப்பாணை வழங்கி இப்பதிவை மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.
  • மருத்துவமனையில் இறப்பு நிகழ்ந்தால் மருத்துவ அலுவலரிடம் படிவம் 4 (இறப்புக்கான காரணம்) சான்று பெற்றுப் பதிய வேண்டும்.
  • பிரதிமாதம் 5-ஆம் தேதிக்குள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பிறப்பு / இறப்பு பதிவினை அனுப்ப வேண்டும்.
  • பிறப்பு / இறப்பு மேற்கொண்டவுடன் பிரிவு – 12 - இன் படி பதிவு நகல் தகவல் அளிக்கும் நபருக்கு வழங்க வேண்டும்.
  • பிறப்பு / இறப்பு பதிவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவை, கீழ்க்கண்டவாறு அமைய வேண்டும்.
  • பிறப்பு பதிவு – குழந்தையின் முதல் உரிமையாகும்.
  • வீட்டில் நிகழும் பிறப்பு / இறப்பை 21 நாள்களுக்குள் VAOவிடம் பதிவு செய்ய வேண்டும்.
  • பிறப்பினை பதிந்தவுடன் குழந்தையின் பெயரையும் பதிய வேண்டும்.
  • குழந்தையின் பெயரை பதிவு செய்வது பெற்றோரின் கடமையாகும்.
  • ஒருமுறை பதிவுசெய்த பெயரை எக்காரணம் கொண்டும் மாற்ற முடியாது.
  • பிறப்பு / இறப்பு பதிவு முடித்தவுடன் இலவசச் சான்று பெற வேண்டும்.
பிறப்பு/இறப்பு பதிவு செய்வதின் நன்மைகள்
  • பிறந்த தேதி மற்றும் பிறந்த இடத்திற்கான அத்தாட்சி இதுவே ஆகும்.
  • குடியுரிமைக்கான அத்தாட்சியும் ஆகும்.
  • வாரிசுரிமைக்கான அத்தாட்சியும் ஆகும்.
  • கடவுச்சீட்டு விண்ணப்பிக்க ஆதாரம் இதுவேயாகும்.
  • வயதை நிரூபிக்க இறுதிச்சான்று இதுவே ஆகும்.
  • ஓட்டுநர் உரிமம் பெற மற்றும் இதர நன்மைகளுக்காகவும் இச்சான்று முக்கியத் தேவையாகும்
ஆதாரம் : கல்விச்சோலை