ஜாமீன் தாரர்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவேண்டிய
விபரங்கள்..
நீதிமன்றத்தில்
குற்றம் சாட்டப்பட்டு
நீதிமான் காவலில் உள்ளவரை
சிறையில் எடுக்க ஒரு நபருக்கு
இரண்டு ஜாமின்தார்கள்
கொடுக்கவேண்டும்
என்று Tamil Nadu criminal Rules
of practice ல் குறிப்பிடப்பட்டு
உள்ளது
தற்போது 2019 ஆண்டு Tamil Nadu Criminal Rules of practice ஜாமின்தார்கள் (Suriety )
கொடுப்பதில் கடுமையான
நிபந்தனைகளை விதித்துள்ளது
Suriety கொடுப்பவர்களுடைய
முழு விபரங்களையும் இனி
நீதிமன்றத்தில் சமர்பிக்கவேண்டும்
இந்த சட்டத்திருத்தம் 2020 ஆண்டு
நடைமுறைக்கு வந்து விட்டது
ஜாமீன் தாரர்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவேண்டிய
விபரங்கள்
1) இரண்டு புகைப்படம்
( புகைப்படங்கள் ஆறுமாத்திற்குள்
எடுக்கப்பட்டு இருக்க வேண்டும்)
2) ஜாமின் கொடுப்பவரின் ஆதார் அட்டை அல்லது பாஸ்போர்ட்
அல்லது ரேஷன் கார்டு
3) என்ன தொழில் வியாபாரமா?
தொழிலா?
தொழில் விபரம்
மாத வருமானம்
கூலி அல்லது சம்பளத்திற்கு
வேலை செய்வதாக இருந்தால்
முதலாளியின் பெயர்
4) சொத்து விபரம்
வாடகை வீடா
சொந்த வீடாக என்கிற
விபரம்
5) வருமான வரி
செலுத்துபவரா
பார்ன் கார்டு விபரம்
கடந்த மூன்று வருடத்திற்கான
வருமான வரி விபரம்
6) இதற்கு முன்பு
. வேறு யாருக்கேனும்
ஜாமின் கொடுக்கப்பட்டு
இருந்தால்
யாருக்கு கொடுத்தார்
எப்பொழுது
எந்த வழக்கில் கொடுத்தார்
என்கின்ற விபரம்
7) கல்வி தகுதி
8) சேமநல நிதி விபரம்
9) வங்கி கணக்கு எண்
வங்கி கணக்கில் தற்போது
இருப்பில் உள்ள தொகை
10) ஜாமீன் கொடுப்பவர்
எதாவது குற்றவழக்கில்
சம்பந்தப்பட்டு இருக்கிறாரா?
என்கின்ற விபரம்
11) குற்றம் சாட்டப்பட்டு
உள்ளவரோடு வேறு குற்ற
வழக்கில் ஜாமீன் கொடுப்பவர்
குற்றம் சாட்டப்பட்டு
உள்ளாரா என்கின்ற
விபரம்
மேற்கண்ட விபரங்கள்
தெரிவித்து affidavit தாக்கல்
செய்யவேண்டும்
என் புதிய சட்ட
திருத்தம் சொல்கிறது..
No comments:
Post a Comment